Monday, 12 December 2016

தீபாவளி (காரண/காரியம்):

#புறத்தில்:

துலாம் மாதமான ஐப்பசியில்  #சூரியன்−#சந்திரன்−#புவி−#அகஸ்திய_நட்சத்திரம் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திப்பதால் ஏற்படும் ஒருவிதமான இயற்கை சக்தியைக் கருத்தில் கொண்டே அதற்கு முந்திய தினமான #சதுர்த்தசியின் அதிகாலையில் வென்னீரில் குளித்துவிட்டு, விளக்கேற்றி
விளக்கின் ஒளியில் #மகாலக்ஷ்மியை
வணங்குதலே #தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதாவது, ஐப்பசி மாதத்தில் #சூரியன் புவியைவிட்டு 180 பாகைகள் விலகி நிற்பதால், புவியில் குறைந்த அளவே சூரியக் கதிர்கள் விழும், எனவே #அம்மாவாசையன்று நிகழும் குறைவான வெப்பச்சலனத்தை ஈடுசெய்ய புவியெங்கும் #தீபஒளி ஏற்றப்படுகிறது.

#அகத்தில்:

#நரன்-மனிதன்
#அசுரன்−ரஜோ, தமோ அசுர குணங்கள்

ஆக மனிதனானவன் ரஜோ, தமோ குணங்களிலிருந்து விடுபட்டு #சத் (சாத்விக) குண வயப்படுதல்தான் அது #நரகாசுரவதம் என சாமான்யர்களுக்கு கதையாக சொல்லப்பட்டது. அதாவது நம்மில் இருக்கும் #அகங்காரத்தை "தீயிலிட்டு" பொசுக்குவதே தீபாவளிப் பண்டிகையின் உண்மைக் காரணமாகும்.

இவ்வாறாக நண்பர்கள் அனைவரும் தங்களுடைய *ரஜோ, தமோ குணங்களை தீயிலிட்டு* "சாத்வீக" குணத்தைப்பெற வேண்டி  இத்தீபாவளித் திருநாளில் வாழ்த்துகிறேன்🙏

No comments:

Post a Comment