Thursday, 1 September 2016

நமசிவாய

நம் உடலானது பஞ்ச பூதங்களால் 
வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனாலேயே அது பூதவுடல். அதுபோல மனிதனின் அறிவுசார் நிலைகளும் ஐந்து படிநிலைகளைக் கொண்டது. அவை,

#பஞ்ச/பூதம் (கிரக தன்மை) − நிலை

ந/மண் (புதன்)− அறியாமை (innocence)
ம/நீர் (சுக்கிரன்) − அனுமானம் (guessing)
சி/நெருப்பு (செவ்வாய்) − அனுபவம் (experince)
வா/காற்று (சனி) − அறிவு (knowledge)
ய/ஆகாயம் (குரு)− ஞானம் (wisdom)

இவை ஸ்தூலம் மற்றும் சூட்சும விசயங்கள் சார்ந்தவை. ஸ்தூலமானது பூதமாகவும் சூட்சுமமானது கிரகமாகவும் பரிணமித்திருக்கும். மேற்கூறியபடி ஒவ்வொரு பூதத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் தன்மை உண்டு. அதுபோல ஒவ்வொரு பருவ நிலைக்கும் சில குறிப்பிட்ட கிரகங்களின் ஆளுமை பிரதானமாயிருக்கும். அதாவது,

நிலை − கிரக/ஆளுமை:

1. அறியாமை − சூ, சந்
2. அனுமானம் − செ, பு, சு
3. அனுபவம் − சனி, ராகு
4. அறிவு − குரு
5. ஞானம் − கேது

அறியாமை அனுமானமாகி
அனுமானம் அனுபவமாகி
அனுபவம் அறிவாகி
அறிவு ஞானமாகும்!

உடலின் இத்தைகைய பஞ்சபூத மற்றும் நவக்கிரக கலவைகளின் கட்டமைப்பைப் (Constrctive design) பொருத்து இதன் அளவீடு நபருக்கு நபர் மாறுபடும். அதாவது, ஒருவர் மற்றொருவரிடமிருந்து மனத்தால், புத்தியால், அறிவால் வேறுபடுவது மேற்கூறிய பஞ்சபூத மற்றும் நவக்கிரகக் கலவைகளின் கட்டமைப்பைப் பொருத்தே அமையும்!

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

No comments:

Post a Comment