Monday, 8 August 2016

#நானும்_கோவிலும் (பாகம்−3)

#திரு+#நளன்+#ஆறு_தர்பாரண்யேஸ்வரர் (#சனீஸ்வரர்−#உடணுறை)

நெடுநாளாய் எழுதவேண்டுமென நினைத்து, காரணமே தெரியாத சில காரணங்களால் இக்கோவிலைப் பற்றி என்னால் எழுதமுடியாமல் போனது, ஆனால் இன்று இக்கோவிலைப்பற்றி எழுதியே தீரவேண்டுமென்ற வைராக்கியத்துடன் சனியின் காரகமாகிய இரவில் (இருட்டு) எழுதுகிறேன். இதுவரை மக்களால் அறியப்படாத சில உண்மைகளுடன், நான் அங்கு சென்று உணர்ந்த தன்மைகளையும் நண்பர்களாகிய உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தலைப்பையும், படத்தையும் பார்த்துவிட்டு உங்கள் அனைவருக்கும் ஒரு சந்தேகம் வந்திருக்கலாம், #திருநள்ளாறில் #சனீஸ்வரன்தானே பிரதானம், அதென்ன #தர்பாரண்பேஸ்வரர் என்று, இப்பதிவின் நோக்கமே இங்குதான் அடங்கியுள்ளது, அதற்குமுன் சிந்தனைக்குரிய சில கேள்விகளும், அதற்குப்பின் விளக்கங்களையும் கூறுகிறேன். மேலும் பரிகாரம் எப்படி வேலை செய்கிறது என்பதன் புரிமாணத்தை இப்பதிவில் முடிந்த அளவில் எழுத முயல்கிறேன்.

பெரும்பாலான மக்களைப் பொருத்தவரை சனிபகவான் என்பவர் கெட்டவராகவும், சனீஸ்வரன் கோவிலுக்குச் சென்றால் அங்கு கொண்டுசென்ற பூஜைப் பொருட்களை அங்கேயே விட்டுவிடுவதுமே வழக்கமாய் இருந்துவருகிறது. ஆனால் திருநள்ளாறுக்கு கொண்டுசென்ற பூஜைப்பொருட்களை வீட்டிற்கு எடுத்துச்செல்லாம் என்பார்கள், காரணம் அங்கிருக்கும் சனீஸ்வரன் #அனுக்கிரகமூர்த்தியாக அருள்பாலிக்கிறாராம், அப்படியென்றால் என்ன...? திடீரென்று சனீஸ்வரன் எப்படி அங்கு மட்டும் நல்லவரானார்..? ஏனெனில் சனீஸ்வரர் இங்கு அனுக்கிரகமூர்த்தியாக இருப்பதற்கு மூலகாரணமாக இருப்பவர் #தர்பாரண்யேஸ்வரர் ஆவார்.

அதாவது எந்த ஒரு நவக்கிரகக் கோயிலானாலும் அங்கு மூலவராக இருந்து அருள்பாலிப்பது எம்பெருமான் #சிவனே ஆவார். இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று உறுதி செய்துகொள்ளலாம். ஆக, ஏன் நவக்கிரகக்கோவில்களில் #சிவபெருமான் மூலவராக இருக்கவேண்டும் என்றால், நவக்கிரக கோவில்களில் அக்கிரகங்களின் #கதிர்வீச்சுகள் மிகுதியாகக் கிடைக்கப்பெற்றாலும் அக்கதிர்வீச்சை அல்லது #அத்தன்மையை நம்மில் கிரகிக்க (to resonate into our body) நமக்கு #பஞ்சபூதத்தின் உதவி அவசியம். அதாவது பஞ்சபூதம் என்றாலே அங்கு "நமசிவாய" என்பதைத்தவிர வேறில்லை என்பதை நாம் நன்கு அறிவோம். ஆக பஞ்சபூதத்

#தத்துவங்களாக:−
#ந−மண்
#ம−நீர்
#சி−நெருப்பு
#வா−காற்று
#ய−ஆகாயம் எனவும்;

#தன்மைகளாக:−
#ந−ருத்திரன்
#ம−அர்த்தநாரி
#சி−காலபைரவர்
#வா−நடராஜர்
#ய−சதாசிவமாய் எங்கும் பரவியிருக்கிறார்.

இங்கு விசயம் என்னவெனில், ஒரு கிரகத்தின் #வேகம் மற்றும் #தன்மையைப் பொறுத்து, அதாவது #கதிர்வீச்சைப்பொறுத்து பஞ்சபூத சிவமானவர் அதனுடன் ஒன்றாய்க் கலந்து அவற்றை நமக்குள் #கிரகிக்க (to resonate) அருள்பாலிப்பார். உதாரணம் ராகு போன்ற வீரியமிக்க கிரகமெனில் அதனை ஈடுகட்டும் வகையில் #காலபைரவ (zero state) தன்மையும்; சனியைப்போல மந்தன் எனில் (inert gas) அதனை சமப்படுத்த தீவிரனாகிய #ருத்ர தன்மை கலந்திருக்கும். ஆக இங்கு மந்தனாகிய சனியின் கதிர்வீச்சை (Ultra Vilolet like rays) நமக்குள் கிரகிக்க இங்கு தர்பாரண்யேஸ்வரர் #ருத்திரனாக அருள்பாலிப்பதாலேயே இங்கு சனிபகவான் அனுக்கிரமூர்த்தியாகிறார்.

#நானுணர்ந்த_ருத்திரன்:

சனியாகிய மந்தனின் மற்றொரு காரகம் #குளுமை. அதாவது, இங்கிருக்கும் கதிர்விச்சுத்தன்மையான #குளுமையை நம் அனைவராலும் நன்றாகவே உணரமுடியும், ஆனால் மந்தனின் அக்கதிர்வீச்சை நமக்குள் செலுத்த (to inject) ருத்ரனாகிய இயக்கம் தேவை. எனவேதான் இங்கு ருத்திரனாக தர்பாரண்யேஸ்வர் அருள்பாலிக்கிறார். இதை நான் எவ்வாறு அறிந்துணர்ந்தேன் எனில், மூலவர் தர்பாரண்யேஸ்வர் அர்த்தமண்டபத்தில் தியானத்தில் அமர்ந்து இருக்கும்போது #சந்திரகலையும் (குளுமை), #சூரியகலையும் (வெப்பம்) தாறுமாறாக மாறி மாறி ஓடி என் நாடியின் தன்மையை மாற்றியமைத்துக்கொண்டே இருந்தது. பொதுவாக சுவாச மாற்றமானது குறைந்தது இரண்டுமணி நேரங்களுக்கு ஒருமுறை மட்டுமே மாறிமாறி ஓடும், ஆனால் அங்கோ ஒருமணி நேரத்தில் பலமுறை மாறிமாறி ஒடியதுமட்டுமில்லாமல் உடலில் நாடியின் வேகத்தையும் அதிகரித்தது, அதுமட்டுமில்லாமல் என்னால் அங்கு இயல்பாக அமர்ந்து அமைதியான ஆழ்ந்த தியானத்திற்குள் செல்லமுடியவில்லை, காரணம் அங்கு ஆக்கிரமித்திருக்கும் #ருத்திரனின் கட்டுக்கடங்கா வேகம் என் #மனத்தை சிதறடித்து, இருப்பினும் இதற்கு காரணம் என்னவென்றே விளங்காமல் வியர்த்து, விறுவிறுத்து வெளியே வந்து பார்த்தால், கோவில் கொடிமரத்தின் முன்மண்டபத்தில் #ருத்திர_பூஜைக்கான ஏற்பாடுகள் தடால்புடலாய் நடந்துகொண்டிருந்தது, பிறகுதான் விளங்கியது ருத்திர தன்மையை மெருகேற்றத்தானே (energy renewal) ருத்திர பூஜை நடத்துவார்கள், அப்போ அங்கே இருப்பது #ருத்திரன் என்பதை அறிவாலும் அறிந்து உறுதி செய்தேன்.

ஆக அங்கு #மந்தனாகிய_குளுமையும்; #ருத்ரனாகிய_வெப்பமும் ஒருசேர கலந்து நம்முள் கிரகிக்கப்படுவதால் ஏழரைச்சனி, அஷ்டம சனி, கண்ட சனி, அர்த்தாஷ்டம சனி என்று சனியின் குறைபாட்டால் மந்தமாக இருப்பவர்களுக்கும், மேலும் சனி தசையால் பெரிதுமாக பாதிகப்பட்டவர்களுக்கும் இந்த கலவை #பெருமருந்தாகும். காரணம் மந்தனாகிய சனியுடன், ருத்திர தன்மையும் கலந்திருப்பதால் உடலுக்கு ஆற்றலும், புத்துணர்ச்சியும் இயல்பாகவே கிடைக்கப்பெறும். அதாவது உடலில் சனித்தன்மை குறைந்திருப்பின் அதை அங்கிருக்கும் மந்தனின் கதிரை நமக்குள் தேவையான அளவு செலுத்தி, சமப்படுத்தியும் (maintaining equilibrium), மாறாக சனித்தன்மை அதிகமாக இருப்பின் அதைக்குறைப்பதுமே இங்கிருக்கும் ருத்திரனாகிய தர்பாரண்யேஸ்வரரின் முக்கிய வேலையாகும்.

#முடிவுரை:

எனவே திருநல்லாறுக்கு செல்லும் அன்பர்கள், வெளியே காட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருக்கும் சனீஸ்வரரை பக்தியுடன் வணங்குவது மட்டுமில்லாமல் விசயம் பொருந்திய மூலஸ்தானத்தில் (எந்திரங்கள், தகடுகள்) தீர்மாணிக்கப்பட்டுள்ள #சனி_ருத்திரக் கலவையை உங்களுக்குள் இலவசமாக கிரகித்துக்கொள்ளுங்கள். அதற்கு அங்கு குறைந்த பட்சம் இரண்டுமணி நேரமாவது இருப்பது அவசியமாகும். உடலின் வலிமைக்கு அல்லது உடலுக்கு சனித்தன்மை எந்த அளவிற்கு அவசியமென்பதை திரு. Astro Babu அய்யா அவர்களின் சனியின் காரத்துவ கட்டுரையைப் படித்து தெரிந்துகொள்ளவும். நன்றி

No comments:

Post a Comment