"நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ"
என #சிவவாக்கியரும்,
"வல்லவர்போல் வேதபுரா ணங்காவ் யங்கள்;
மந்திரங்கள் கோடானு கோடி யென்றும்
சொல்லுவார்;
கோவிலென்றுந் தீர்த்த மென்றுந்; திருடர்கள்தா னலைந்தலைந்து திரிவார் மட்டை;
வெல்வதொரு பிரமநிலை யறியா மற்றான்; வேரற்ற மரம்போலே விழுவார் பாரே"
எனக் #காகபுசண்டரும், கோவில் மற்றும் விக்கிரக வழிபாடுகளை வெகுவாகப் பழித்துக்கூறினாலும்,
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று"
என #ஔவையாரும்,
"கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"
என #முதுமொழிகள் பலவாறு கோவில்களின் சிறப்பை முன்னிறுத்திக்கூறுவதால் ஏன் கோவில்கள் நிறுவப்பட்டன என்றும், நாம் ஏன் கோவிலுக்குச் செல்லவேண்டும் என்று நம்மை ஆழமாகச் சிந்திக்க வைக்கிறது. இதற்கான காரண−காரியப் பின்னனிகளையும், நான் அறிந்துணர்ந்த விசயங்களையும், நண்பர்களாகிய உங்கள் அனைவரிமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
#ஆலயம்−ஆன்மா லயிக்குமிடம் என்றும்; #கோவில்−இறைவனுடைய இல்லம் என்றும் விளக்கங்கள் கூறப்பட்டாலும், கோவில்கள் நிறுவப்பட்டதை நான்கு நிலைகளாக #ஆகமகங்கள் குறிப்பிடுகின்றன. அவை,
1. #தைவிகம்−புண்ணிய ஆத்மாக்களாலும்
2. #ஆசுரம்−அசுரர்களாலும்
3. #ஆர்ஷம்−முனிவர்களாலும், ரிஷிகளாலும்
4. #மாநுஷம்−அரசர்களாலும், மக்களாலும்.
இங்கு #ஆகமங்கள் என்பது எவ்விடத்தில், எந்த தன்மைகளில், எப்படிப்பட்ட கோவில்களை நிறுவவேண்டுமென்ற #ஆகமவிதிகள் கொண்ட தொகுப்பாகும். மேலும் இதை தத்துவ ரீதியாகக் கூறவெண்டுமெனில் "ஆகதம்−கதம்−மதம்" என்பதன் முதல் எழுத்துக்களே ஆகமங்களாயின, அதாவது
#ஆகதம்−வந்தது (சிவனிடமிருந்து)
#கதம்−சென்றது (சிவனிமிருந்து சக்திக்கு)
#மதம்−மதித்துப்போற்றப்பட்டது (சக்தியிடமிருந்து விஷ்ணு மற்றும் ஏனையவர்களுக்கு) என்றும் கூறுபவரும் உண்டு.
அதாவது ஆகம விதிப்படி ஒரு கோவிலை நிறுவ, அவ்விடத்தின் தன்மையை (பஞ்சபூத/நவக்கிரக) முதலில் அறியவேண்டும் அல்லது எவ்விடத்தில் அம்மாதிரியான தன்மைகள் இருக்கிறதோ அவ்விடங்களில் அத்தன்மைகளுக்குண்டான விருட்சங்களை பயிரிட்டும் அல்லது அவ்விடங்களில் இருக்கும் #உயிர்ப்புள்ள_ஜீவன்களின் (ஜீவசமாதி) அதிர்வலைகளை வைத்தும் தீர்மானித்தனர். உதாரணமாக தேவ விருட்சங்கள் என்று கூறப்படும் #அரசு, #நாகலிங்கம், #வில்வம், #மருதம் மற்றும் #வெண்நாவல் ஆகியவை குறிப்பிட்ட பஞ்ச பூதத்தன்மைகள் அல்லது தத்துவங்கள் இருக்குமிடங்களில் மட்டுமே வளரக்கூடியவை அல்லது அம்மாதிரியான விருட்சகங்கள் எவ்விடத்தில் வளர்கிறதோ அவ்விடத்தில் அத்தன்மைகளுக்கான கோவில்களைத் தீர்மானித்தனர்.
இயற்கையாகவே #மலைகள் மற்றும் #நதிநிலைகளில் அத்தன்மைகள் அதிகமாக காணப்படுவதால் அவ்விடங்களில் ஆகம விதிகள் கொண்டு கோவில்களைத் தீர்மானித்தனர். அது மட்டுமில்லாது #அக்னி கொண்டு பூஜைகளாலும் #மந்திரங்களாலும் சக்தியோடங்களை ஓரிடத்தில் நிலைநிறுத்தியும், நீர்நிலைகளை அமைத்தும் அவ்விடத்தில் கோவில்களைத் தீர்மானித்தனர்.
பொதுவாக கோவில்களின் தன்மைகளைப் பொறுத்து அவற்றை மூன்று விதங்களாகப் பிரித்துக்கூறலாம். அவை,
1. #ஸ்தூலம் (உடல்)
2. #சூட்சுமம் (மனம்)
3. #சூன்யம் (உயிர்/ஆன்மா)
அதாவது, பெரும்பாலான கோவில்கள் ஸ்தூலம் சார்ந்த விசயங்களை முன்னிறுத்தியே தீர்மானிக்கப்பட்டுள்ளன, காரணம் ஸ்தூலமாகிய நம் #உடலை #ஸ்திரப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஆகும், எனில் ஏன் உடலை ஸ்திரப்படுத்ர வேண்டுமென்பதை நாம் #திருமூலரின் பாடலைக்கொண்டே அறியலாம், அது என்னவெனில்,
"உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்"
என்பதுவே ஆகும். ஆக, அகத்திலிருக்கும் இறைவனைத் (உயிர்/ஆன்மா) தாங்கி நிற்கும் நம் ஸ்தூலமாகிய கோவிலை (உடலை) #ஸ்திரப்படுத்துவது அவசியமாகிறது. மேலும் ஸ்தூல விசயங்களெனில் அங்கு #பஞ்சபூதங்களும், #நவக்கிரகங்களும் வந்துவிடுகின்றன. ஏனெனில் உடல் செயல்பாட்டிற்கும், நவக்கிரக செயல்பாடுகளுக்கும் (கதிர்வலைகள்) #சார்புடையதாவே #இச்சிருஷ்யும் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, நாம் ஜனித்தநாள் முதல் உடலானது, புலன்களினூடே கிரகங்களின் ஒளி/மின்காந்த கதிர்வலைகளால் (Photo/Elecro/magnetic radiations) தொடர்புபட்டுள்ளது.
எனவேதான் #ஜோதிடத்தில் நவக்கிரகங்களின் செயல்பாடுகள் பிரதானமாக்கூறப்பட்டு, #பரிகாரங்களாய் கோவில்களுக்குப் போகச்சொல்கின்றனர். எனவே, #பஞ்சபூதத்தன்மைகள் (ருத்ர, அர்த்தநாரி, காலபைரவ, நடராஜ, சதாசிவா) மற்றும் #தத்துவங்கள் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) நவக்கிர கதிர்வீச்சுகளுக்கு ஏற்றார்போல் கலந்து அமைக்கப்பட்டு ஆகம விதிகள் கொண்டு அவ்விடங்களில் கோவில்களைத் தீர்மானித்தனர். மேலும், ஸ்தூல விசயங்களுக்காக தீர்மானிக்கப்பட்ட கோவில்களில் பஞ்சபூத−நவக்கிர தன்மைகள் எவ்வாறு நமக்குள் கிரகிக்கப்படுகிறதென்றும் நான் முன்னரே என்னுடைய கட்டுரைகளில் (நானும்−கோவிலும்) பதிவிட்டுள்ளேன்.
மேற்கூறப்பட்ட ஸ்தூல சம்பந்தமுடைய கோவில்கள் பெரும்பாலும் #சைவசித்தாந்தக் கோவில்களாகவே இருக்கிறது. அவை சிவன் (பஞ்சபூத) அல்லது சிவ−நவக்கிர கோவில்களாகவும், முருகன், அம்மன் விநாயகர் மற்றும் ஏனைய தெய்வங்களின் பெயர்களில் குறிப்பிட்ட தன்மைகள் அல்லது கிரக சக்தியை பிரதானமாகக்கொண்டு தீர்மானித்துள்ளனர். ஆனால் #வைணவ (பெருமாள்) கோவில்கள் அனைத்துமே சூட்சுமமாகிய #மனம் சார்ந்த விசயங்களின் அடைப்படைலேயே தீர்மானித்துள்ளனர். அதாவது, எல்லாப் பெருமாள் அல்லது விஷ்ணு கோவில்களிலும் மனம் லயிக்கும் விதமான ஆடம்பர கட்டிட அமைப்புகள், வாசனைப் பொருட்கள் (ஜவ்வாது−சந்தனம், வெண்ணெய், துளசி, மரிக்கொழுந்து) மற்றும் ஆபரணங்களைக் கொண்டும் அமைக்கப்பட்டிருக்கும். மேலும் அங்கு இயல், இசை, நாட்டிய அரங்கேற்றங்களும் நடைபெறும்விதமாக உருவாக்கப்பட்டிருக்கும். அதுமிட்டுமில்லாது ஒரு ஹாஸ்யமான சுற்றுச்சூழலை நாம் அங்கு உணரமுடியும். மாறாக சைவசித்தாந்த சிவன் கோவில்களில் மயான அமைதியும், இருட்டுமாகிய தன்மையை உணரலாம்.
ஆனால் #சூன்யம் சார்ந்த கோவில்கள் என்பது அங்கு #உயிர்ப்புள்ள ஜிவனின் அலைகள் (அல்லது) புண்ணிய ஆத்மாக்களால் விக்கிரங்கள் (அல்லது) லிங்கங்கள் வைத்து பூஜிக்கப்பட்ட ஸ்தலங்களாகும். அவை சூட்சுமத்தை #ஸ்திரப்படுத்தும் விசயங்களாகும். எனவே அங்கு பஞ்ச பூதத்தன்மையோ அல்லது கிரக கதிர்வீச்சுகளோ பிரதானமாக இருப்பதற்குச் சாத்தியமில்லை, காரணம் அங்கு உயிர்ப்புள்ள #ஜீவனே_சிவமாகி அங்கு வரும் ஆத்மாக்களுடன் தொடர்புகொண்டு நல்லதொரு #அதிர்வலைகளை சூட்சுமமாக ஏற்படுத்துகின்றன. அதாவது பஞ்சபூத/நவக்கிரக கோவில்களைத் தவிர அனைத்து சிவன்கோவில்களுமே உயிர்ப்புள்ள ஜீவனின் #சமாதியே ஆகும். அவ்வாறு ஜீவசமாதியானவர்களின் மேல்பகுதிகளில் சிவலிங்கத்தை வைத்து கோவிலாகத் தீர்மானித்தனர்.
சைவசித்தாந்தக் கோவில்களைத்தவிர #பௌத்த மதக் கோவில்களும் ஜிவனின் உயிர்ப்புள்ள ஸ்தலங்களே ஆகும். மேலும் #கிறித்துவ மற்றும் #இஸ்லாமியக் கோவில்களும் #சூன்யம் சம்பந்தமுடைய தன்மைகளைக்கொண்டே நிறுவப்படிருக்கும். எவ்வாறெனில் அங்கு பிரபஞ்ச சக்திகளான ஒளி மற்றும் ஒலியை (சப்த ஸ்வரங்களாகிய வேத மந்திரங்கள், மணியோசைகள்) பிரதானமாகக் கொண்டிருப்பதை நாம் அறியலாம். ஏனெனில் இறைவன் #ஒளியாகவும் (ஆன்மா), #ஒலியாகவும் (உயிர்) இருக்கிறான் என்பதை அனைத்து மத நூல்களை (வேதம்/பைபிள்/குர்ரான்) ஆழமாகக் கற்றறிந்தவர்கள் நன்கு அறிவர்.
அதாவது ஒளியில் ஒலி (noise) இருப்பதையும், ஒலியில் ஒளி (photon) இருப்பதையும் அறிவியல் பூர்வமாக அறியலாம். மேலும் ஒளி−ஒலியானது நம்மில் (உடலில்) எவ்வாறு தொடர்பு படுகிறதென்பதை அடுத்தாக வரும் பதிவுகளில் விளக்கமாகப் பதிகிறேன். ஆக, கோவில்கள் ஏன் நிறுவப்பட்டன மற்றும் எவ்வாறு தீர்மானிக்கப்பட்டன என்பதையும், அங்கு செல்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகளையும் என்னால் இயன்றவரை எடுத்துக்கூறியுள்ளேன். மேலும் இது அனைவருக்கும் பயன்படும்விதமாக நீங்கள் அனைவரும் இப்பதிவை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டி விழைகிறேன். நன்றி
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ"
என #சிவவாக்கியரும்,
"வல்லவர்போல் வேதபுரா ணங்காவ் யங்கள்;
மந்திரங்கள் கோடானு கோடி யென்றும்
சொல்லுவார்;
கோவிலென்றுந் தீர்த்த மென்றுந்; திருடர்கள்தா னலைந்தலைந்து திரிவார் மட்டை;
வெல்வதொரு பிரமநிலை யறியா மற்றான்; வேரற்ற மரம்போலே விழுவார் பாரே"
எனக் #காகபுசண்டரும், கோவில் மற்றும் விக்கிரக வழிபாடுகளை வெகுவாகப் பழித்துக்கூறினாலும்,
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று"
என #ஔவையாரும்,
"கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"
என #முதுமொழிகள் பலவாறு கோவில்களின் சிறப்பை முன்னிறுத்திக்கூறுவதால் ஏன் கோவில்கள் நிறுவப்பட்டன என்றும், நாம் ஏன் கோவிலுக்குச் செல்லவேண்டும் என்று நம்மை ஆழமாகச் சிந்திக்க வைக்கிறது. இதற்கான காரண−காரியப் பின்னனிகளையும், நான் அறிந்துணர்ந்த விசயங்களையும், நண்பர்களாகிய உங்கள் அனைவரிமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
#ஆலயம்−ஆன்மா லயிக்குமிடம் என்றும்; #கோவில்−இறைவனுடைய இல்லம் என்றும் விளக்கங்கள் கூறப்பட்டாலும், கோவில்கள் நிறுவப்பட்டதை நான்கு நிலைகளாக #ஆகமகங்கள் குறிப்பிடுகின்றன. அவை,
1. #தைவிகம்−புண்ணிய ஆத்மாக்களாலும்
2. #ஆசுரம்−அசுரர்களாலும்
3. #ஆர்ஷம்−முனிவர்களாலும், ரிஷிகளாலும்
4. #மாநுஷம்−அரசர்களாலும், மக்களாலும்.
இங்கு #ஆகமங்கள் என்பது எவ்விடத்தில், எந்த தன்மைகளில், எப்படிப்பட்ட கோவில்களை நிறுவவேண்டுமென்ற #ஆகமவிதிகள் கொண்ட தொகுப்பாகும். மேலும் இதை தத்துவ ரீதியாகக் கூறவெண்டுமெனில் "ஆகதம்−கதம்−மதம்" என்பதன் முதல் எழுத்துக்களே ஆகமங்களாயின, அதாவது
#ஆகதம்−வந்தது (சிவனிடமிருந்து)
#கதம்−சென்றது (சிவனிமிருந்து சக்திக்கு)
#மதம்−மதித்துப்போற்றப்பட்டது (சக்தியிடமிருந்து விஷ்ணு மற்றும் ஏனையவர்களுக்கு) என்றும் கூறுபவரும் உண்டு.
அதாவது ஆகம விதிப்படி ஒரு கோவிலை நிறுவ, அவ்விடத்தின் தன்மையை (பஞ்சபூத/நவக்கிரக) முதலில் அறியவேண்டும் அல்லது எவ்விடத்தில் அம்மாதிரியான தன்மைகள் இருக்கிறதோ அவ்விடங்களில் அத்தன்மைகளுக்குண்டான விருட்சங்களை பயிரிட்டும் அல்லது அவ்விடங்களில் இருக்கும் #உயிர்ப்புள்ள_ஜீவன்களின் (ஜீவசமாதி) அதிர்வலைகளை வைத்தும் தீர்மானித்தனர். உதாரணமாக தேவ விருட்சங்கள் என்று கூறப்படும் #அரசு, #நாகலிங்கம், #வில்வம், #மருதம் மற்றும் #வெண்நாவல் ஆகியவை குறிப்பிட்ட பஞ்ச பூதத்தன்மைகள் அல்லது தத்துவங்கள் இருக்குமிடங்களில் மட்டுமே வளரக்கூடியவை அல்லது அம்மாதிரியான விருட்சகங்கள் எவ்விடத்தில் வளர்கிறதோ அவ்விடத்தில் அத்தன்மைகளுக்கான கோவில்களைத் தீர்மானித்தனர்.
இயற்கையாகவே #மலைகள் மற்றும் #நதிநிலைகளில் அத்தன்மைகள் அதிகமாக காணப்படுவதால் அவ்விடங்களில் ஆகம விதிகள் கொண்டு கோவில்களைத் தீர்மானித்தனர். அது மட்டுமில்லாது #அக்னி கொண்டு பூஜைகளாலும் #மந்திரங்களாலும் சக்தியோடங்களை ஓரிடத்தில் நிலைநிறுத்தியும், நீர்நிலைகளை அமைத்தும் அவ்விடத்தில் கோவில்களைத் தீர்மானித்தனர்.
பொதுவாக கோவில்களின் தன்மைகளைப் பொறுத்து அவற்றை மூன்று விதங்களாகப் பிரித்துக்கூறலாம். அவை,
1. #ஸ்தூலம் (உடல்)
2. #சூட்சுமம் (மனம்)
3. #சூன்யம் (உயிர்/ஆன்மா)
அதாவது, பெரும்பாலான கோவில்கள் ஸ்தூலம் சார்ந்த விசயங்களை முன்னிறுத்தியே தீர்மானிக்கப்பட்டுள்ளன, காரணம் ஸ்தூலமாகிய நம் #உடலை #ஸ்திரப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஆகும், எனில் ஏன் உடலை ஸ்திரப்படுத்ர வேண்டுமென்பதை நாம் #திருமூலரின் பாடலைக்கொண்டே அறியலாம், அது என்னவெனில்,
"உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்"
என்பதுவே ஆகும். ஆக, அகத்திலிருக்கும் இறைவனைத் (உயிர்/ஆன்மா) தாங்கி நிற்கும் நம் ஸ்தூலமாகிய கோவிலை (உடலை) #ஸ்திரப்படுத்துவது அவசியமாகிறது. மேலும் ஸ்தூல விசயங்களெனில் அங்கு #பஞ்சபூதங்களும், #நவக்கிரகங்களும் வந்துவிடுகின்றன. ஏனெனில் உடல் செயல்பாட்டிற்கும், நவக்கிரக செயல்பாடுகளுக்கும் (கதிர்வலைகள்) #சார்புடையதாவே #இச்சிருஷ்யும் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, நாம் ஜனித்தநாள் முதல் உடலானது, புலன்களினூடே கிரகங்களின் ஒளி/மின்காந்த கதிர்வலைகளால் (Photo/Elecro/magnetic radiations) தொடர்புபட்டுள்ளது.
எனவேதான் #ஜோதிடத்தில் நவக்கிரகங்களின் செயல்பாடுகள் பிரதானமாக்கூறப்பட்டு, #பரிகாரங்களாய் கோவில்களுக்குப் போகச்சொல்கின்றனர். எனவே, #பஞ்சபூதத்தன்மைகள் (ருத்ர, அர்த்தநாரி, காலபைரவ, நடராஜ, சதாசிவா) மற்றும் #தத்துவங்கள் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) நவக்கிர கதிர்வீச்சுகளுக்கு ஏற்றார்போல் கலந்து அமைக்கப்பட்டு ஆகம விதிகள் கொண்டு அவ்விடங்களில் கோவில்களைத் தீர்மானித்தனர். மேலும், ஸ்தூல விசயங்களுக்காக தீர்மானிக்கப்பட்ட கோவில்களில் பஞ்சபூத−நவக்கிர தன்மைகள் எவ்வாறு நமக்குள் கிரகிக்கப்படுகிறதென்றும் நான் முன்னரே என்னுடைய கட்டுரைகளில் (நானும்−கோவிலும்) பதிவிட்டுள்ளேன்.
மேற்கூறப்பட்ட ஸ்தூல சம்பந்தமுடைய கோவில்கள் பெரும்பாலும் #சைவசித்தாந்தக் கோவில்களாகவே இருக்கிறது. அவை சிவன் (பஞ்சபூத) அல்லது சிவ−நவக்கிர கோவில்களாகவும், முருகன், அம்மன் விநாயகர் மற்றும் ஏனைய தெய்வங்களின் பெயர்களில் குறிப்பிட்ட தன்மைகள் அல்லது கிரக சக்தியை பிரதானமாகக்கொண்டு தீர்மானித்துள்ளனர். ஆனால் #வைணவ (பெருமாள்) கோவில்கள் அனைத்துமே சூட்சுமமாகிய #மனம் சார்ந்த விசயங்களின் அடைப்படைலேயே தீர்மானித்துள்ளனர். அதாவது, எல்லாப் பெருமாள் அல்லது விஷ்ணு கோவில்களிலும் மனம் லயிக்கும் விதமான ஆடம்பர கட்டிட அமைப்புகள், வாசனைப் பொருட்கள் (ஜவ்வாது−சந்தனம், வெண்ணெய், துளசி, மரிக்கொழுந்து) மற்றும் ஆபரணங்களைக் கொண்டும் அமைக்கப்பட்டிருக்கும். மேலும் அங்கு இயல், இசை, நாட்டிய அரங்கேற்றங்களும் நடைபெறும்விதமாக உருவாக்கப்பட்டிருக்கும். அதுமிட்டுமில்லாது ஒரு ஹாஸ்யமான சுற்றுச்சூழலை நாம் அங்கு உணரமுடியும். மாறாக சைவசித்தாந்த சிவன் கோவில்களில் மயான அமைதியும், இருட்டுமாகிய தன்மையை உணரலாம்.
ஆனால் #சூன்யம் சார்ந்த கோவில்கள் என்பது அங்கு #உயிர்ப்புள்ள ஜிவனின் அலைகள் (அல்லது) புண்ணிய ஆத்மாக்களால் விக்கிரங்கள் (அல்லது) லிங்கங்கள் வைத்து பூஜிக்கப்பட்ட ஸ்தலங்களாகும். அவை சூட்சுமத்தை #ஸ்திரப்படுத்தும் விசயங்களாகும். எனவே அங்கு பஞ்ச பூதத்தன்மையோ அல்லது கிரக கதிர்வீச்சுகளோ பிரதானமாக இருப்பதற்குச் சாத்தியமில்லை, காரணம் அங்கு உயிர்ப்புள்ள #ஜீவனே_சிவமாகி அங்கு வரும் ஆத்மாக்களுடன் தொடர்புகொண்டு நல்லதொரு #அதிர்வலைகளை சூட்சுமமாக ஏற்படுத்துகின்றன. அதாவது பஞ்சபூத/நவக்கிரக கோவில்களைத் தவிர அனைத்து சிவன்கோவில்களுமே உயிர்ப்புள்ள ஜீவனின் #சமாதியே ஆகும். அவ்வாறு ஜீவசமாதியானவர்களின் மேல்பகுதிகளில் சிவலிங்கத்தை வைத்து கோவிலாகத் தீர்மானித்தனர்.
சைவசித்தாந்தக் கோவில்களைத்தவிர #பௌத்த மதக் கோவில்களும் ஜிவனின் உயிர்ப்புள்ள ஸ்தலங்களே ஆகும். மேலும் #கிறித்துவ மற்றும் #இஸ்லாமியக் கோவில்களும் #சூன்யம் சம்பந்தமுடைய தன்மைகளைக்கொண்டே நிறுவப்படிருக்கும். எவ்வாறெனில் அங்கு பிரபஞ்ச சக்திகளான ஒளி மற்றும் ஒலியை (சப்த ஸ்வரங்களாகிய வேத மந்திரங்கள், மணியோசைகள்) பிரதானமாகக் கொண்டிருப்பதை நாம் அறியலாம். ஏனெனில் இறைவன் #ஒளியாகவும் (ஆன்மா), #ஒலியாகவும் (உயிர்) இருக்கிறான் என்பதை அனைத்து மத நூல்களை (வேதம்/பைபிள்/குர்ரான்) ஆழமாகக் கற்றறிந்தவர்கள் நன்கு அறிவர்.
அதாவது ஒளியில் ஒலி (noise) இருப்பதையும், ஒலியில் ஒளி (photon) இருப்பதையும் அறிவியல் பூர்வமாக அறியலாம். மேலும் ஒளி−ஒலியானது நம்மில் (உடலில்) எவ்வாறு தொடர்பு படுகிறதென்பதை அடுத்தாக வரும் பதிவுகளில் விளக்கமாகப் பதிகிறேன். ஆக, கோவில்கள் ஏன் நிறுவப்பட்டன மற்றும் எவ்வாறு தீர்மானிக்கப்பட்டன என்பதையும், அங்கு செல்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகளையும் என்னால் இயன்றவரை எடுத்துக்கூறியுள்ளேன். மேலும் இது அனைவருக்கும் பயன்படும்விதமாக நீங்கள் அனைவரும் இப்பதிவை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டி விழைகிறேன். நன்றி
No comments:
Post a Comment