Monday, 8 August 2016

மனம் என்கிற #மாயையின் சக்தி

மனத்தின் வெளிப்பாடு தான் #உலகம். மனிதன் பிறப்பதற்குமுன் மனம் என்ற ஒன்று இல்லை, அது உண்டாகாது. மனம் என்பது இந்த பூமியில் பிறந்தவுடன் வருவது ஆகும்.

#மனம் என்பது ஐம்புலனுகர்ச்சியான
கண்− பார்ப்பதாலும்
காது− கேட்பதாலும்
மூக்கு− நுகர்வதாலும்
வாய்− சொல் மற்றும் சுவைப்பதாலும்
தோலின்− தொடு உணர்வாலும்

நாளடைவில் உருவாகும்.

ஆக, ஏதாவது ஒன்று இயங்கினால் மட்டுமே மனம் உருவாகும். மூன்று மாதங்கள் சென்ற பின் மூளை வளர்ச்சிபெறத் தொடங்கும். நாம் அதை "அறிவு" என்று அழைகின்றோம். மிருகங்களுக்கு அறிவு மட்டும் வளரும்.
ஆனால் மனிதனுக்கோ மனமும் அறிவும் சேர்ந்து வளரும். எனவே மனம் என்ற ஒன்று மனித இனத்திற்கு மட்டுமே உண்டு.

"மனம் இருப்பதாலேயே அவன் மனிதன்".
மனிதன் என்ற தமிழ் சொல்லுக்கு அழிவில்லாதவன் என்று பொருள்.

#மா அல்லது #ம என்றால் மனம்
#நீ அல்லது #நி என்றால் தான் அல்லது தனக்கு
#தன் என்றால் தன்னகத்தே கொண்டுள்ள, அதாவது மற்றதர்கல்ல

ம +நீ + தன் = மனிதன்
அதாவது, மனத்தை தன்னகத்தை கொண்டுள்ளவன் "மனிதன்"

மேலும், மனமானது எதை உள் வாங்குகிறதோ, அது அதுவாக மாறும் தன்மை கொண்டது. ஜீவனின் சலனம் மனம்.

No comments:

Post a Comment