Monday, 28 September 2020

கர்மாவை ஏன் மாற்றியமைக்க இயலாது..?

ஒரு விதையில் உள்ள வித்தின் கட்டமைப்பானது தீர்மானிக்கப்பட்ட குணத்தைப் பெற்றிருக்கும். அதாவது காலங்காலமாக அதன் முன்னோர்களால் கடத்தப்பட்ட குணங்கள் அனைத்தும் அவ்வித்தில் பூரணமாய் பரணமித்திருக்கும். மேலும், அது காலத்தால் விரிந்து வித்தில் உள்ள குணபேதத்தை காலத்தால் வெளிப்படுத்துமே, தவிர வித்தின் கட்டமைப்பைத் தாண்டிய தன்மைகள் ஒருபோதும் வெளிப்படாது.

அதுபோலவே, ஒரு மனிதக் கருவின் கர்மக்கட்டமைப்பும் அது கருவுற்றபோதே அதன் குணமானது தீர்மானிக்கப்பட்டு, காலத்தால் குணபேங்களாக விரிந்து வெளிப்படுமே, தவிர கட்டமைப்பிற்கு அப்பாற்பட்ட தன்மைகள் ஒருபோதும் வெளிப்படாது. இதுவே சிருஷ்ட்டி தத்துவமாகும்.

இதில் விசயம் என்னவெனில் ஒருமுறை கட்டமைக்கப்பட்டுவிட்டால் அதை யாராலும் மாற்றியமைக்க இயலாது. மீறி மாற்றியமைக்க முற்பட்டால் அது அழிந்துவிடும். அந்தக் கட்டமைப்புதான் "கர்மா" ஆகும். அதன் விளைவே கர்மவினையாகும். இதில் உடலானது கர்மவினையை தாங்கும் காரியப் பொருளாகவும், உயிர்/ஆன்மா அவ்வுடல் இயங்குவதற்கு காரணப் பொருளாகவும் மற்றும் மனம் அதனை இயக்கும் காரணியாகவும் இருந்து செயல்படும்.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

No comments:

Post a Comment