இப்பிரபஞ்சம் முழுவதும் ஒளியாலும், ஓசையாலும் நிரப்பப்பட்டுள்ளது. இப்பிரபஞ்சத்தின் அங்கமான நமது உடலும் மூல மந்திரமான ஓம்கார நாதத்தால் கட்டப்பட்டுள்ளது. அதுவே இப்பிரபஞ்ச பேராற்றலின் உயிர்நாடியுமாகும். இருப்பினும், இம்முலத்திலிருந்து விரிந்த கிளை மந்திரங்கள் ஏராளம். அதாவது, நமது உடலின் ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு விதமான பீஜத்தை தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருக்கும். அதையே நாம் உடலின் நாடிகள் எனவும் கூறுகிறோம். அப்படியாக நமது உடலில் இருந்து வெளிப்படும் ஒட்டுமொத்த மந்திரங்களின் எண்ணிக்கை 72,000. அதில் பிரதானம் 108, இவை அனைத்தும் இயங்க காரணமாய் இருக்கும் மூலம் ஒன்றாகும். இப்படியாக பஞ்ச பூதங்களுடன் / ஒலி வடிவம் இணையப்பெற்று இயங்குவதாலேயே வேத சாஸ்திரம் என்பது மந்திர வடிவங்களாய் இருக்கிறது. அவை நம் உடலுக்கு விசயம். உடல் உயிருக்கு விசயம்!
C.S.மல்லீஸ் குமார்
சென்னை
No comments:
Post a Comment