Monday, 28 September 2020

நாமும் ஜோதிடமும்

ஜோதிடம் என்பது "சார்புடைமை" (relativity). அதாவது, அகத்திற்கும்/புறத்திற்கும் உள்ள தொடர்புதான் ஜோதிடம். இதில் நாம் என்பது தன்னிலை, 1ம் பாவம்; நமக்கு முன்னிலை என்பது 7ம் பாவம். அதாவது, 1 லிருந்து 7 வரை நம்மைச் சார்ந்த விசயங்கள், ஆனால் 7 லிருந்து 12 என்பது நாம் தொடர்புகொள்ளும் விசயங்கள். ஆக ஜோதிடத்தில் 12 பாவங்கள் என்பது அகத்திலும்−புறத்திலும் தொடர்புபட்டு, காலத்தால் #கர்மாக்களாய் பரிணமித்திருக்கிறது. அவை:−

1. சஞ்சிதம்−1,4,7,10 (Past and fixed)
2. பிரார்ப்தம்−2,5,8,11 (Present and practicing)
3. ஆகாமியம்−3,6,9,12 (Future and applicable)

ஜோதிடமானது ஐம்புலனினூடே (கண், காது, முக்கு, வாய், சருமம்) நம்மைத் தொடர்புகொண்டு நமக்கும், நம் செயல்பாடுகளுக்கும் காரண/காரியமாய் இருக்கிறது. இங்கு கிரகங்களாகச் சொல்லப்படும் #ராகு/#கேது என்பவை "நேர்மின் மற்றும் எதிர்மின்" தன்மையுள்ள இருபடி−மூலங்கள். மேலும், #சூரியன்−#சந்திரன் என்பவை ஆத்மா−மனமாய், ராஜா−ராணியாய், சிவம்−சக்தியாய், இடகலை−பிங்கலையாய், புரோட்டான்−எலக்ட்ரானாய் உள்ளும்−புறமும் பிரதானமாக இருந்து, செயல்பட்டு, அதனுடன் கூடிய ஆதார சக்கரங்களாய் குரு, சனி, செவ்வாய், புதன், சுக்கிரனும் இயங்குகின்றன. இவை அனைத்துமே அகத்திலும்−புறத்திலும் இருந்து நமக்கும், நம் செயல்பாடுகளுக்கும் காரண/காரியகங்களாகச் செயல்படுகின்றன.

இன்னும் விளக்கமாகக் கூறவேண்டுமெனில், உடலில் சுவாசம் என்கிற உயிர்காற்று இருக்கும் வரை ஜோதிடம் என்கிற சார்புடைமை வேலை செய்யும்👍அதாவது, சுவாசம் இருந்தாலே அங்கு ஜோதிடம்தான் (நாடிகளில்−நவகிரகங்களின் நாட்டியம்)  பிரதானமாக வேலை செய்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம்🙏 

ஒருவன் இப்படித்தான் உதாரண புருஷனாய் இருக்க வேண்டும் என்பதற்கு அவனுடை 1,5,9 (லக்கினம்/பூர்வபுண்ணியம்/பாக்கியம்) பாவங்கள் வலுவாக இருக்க வேண்டும், இதற்கு உதாரணம் #ஶ்ரீராமர்; ஆனால் ஒருவன் எப்படி இருக்க கூடாதென்பதற்கு அவனுடைய 3,6,11 ஆகிய பாவங்களின் ஸ்திர தன்மையே காரணமாகும், இதற்கு உதாரணம் #ராவணன்.

இதைத்தான் "ஶ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில்" காமம்−குரோதம்−லோபம் (3,6,11) இருப்பவன் தன்னிலை (சத்தியத்தை)  மறந்து, அழிவை சந்திப்பான் எனக்கூறியுள்ளார்🙏

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

No comments:

Post a Comment