முற்பிறப்பில் நாம் செய்த கர்மவினைகள் சஞ்சீத கர்மாவாக நமது முன்னோர்கள் மற்றும் பெற்றோர் வழியாக இப்பிறப்பில் நமக்கு பிராப்த கர்மாவாக வரும். அதில் பாவம் மற்றும் புண்ணியம் என இரண்டுமே அடங்கும். அதில், நாம் என்ன விதமான பாவ / புண்ணியங்களை இப்பிறவியில் அனுபவிக்கிறோம் என்பதை நமது லக்கின பாவம் மூலம் அறியலாம். அதாவது, 12 லக்கினங்களும் சில குறிப்பிட பாவங்கள் வழியாக நவக்கிரகங்களின் மூலம் நம் பாவ / புண்ணிய கர்ம வினைகளைக் கடத்தும். உதரணமாக, கீழ்க்கண்ட லக்கினங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள பாவங்கள் வழியாகத்தான் பாவ / புண்ணிய கர்மாக்கள் நமக்கு வந்து சேரும். அதாவது, அந்த குறிப்பிட்ட பாவங்களே ராசியாகவோ அல்லது ஆட்சி / உச்ச / நீச கிரகங்கள் இருக்கும் பாவங்களாகவோ அல்லது அப்பாவாதிபதிகள் உச்ச / நீசமாகவோ அல்லது அப்பாவத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தோ அல்லது ராகு / கேதுக்கள் இருந்தோ இப்பிறப்பின் பிராப்த கர்மாவைச் செயல்படுத்தும். ஆக, இப்பிறப்பில் உங்கள் செயல்பாடுகள் அனைத்தும் அப்பாவங்களின் நன்மை / தீமைகளை சார்ந்தே செயல்படும் என்பது எமது ஜோதிட அனுபவத்தில் யாமறிந்த உண்மையாகும்.
மேஷம் / 2,4,5,7,8,10,11
ரிசபம் / 3,4,5,6,7,9,11,12
மிதுனம் / 4,6,7,10,11
கடகம் / 3,6,9,11,12
சிம்மம் / 1,3,4,9,10
கன்னி / 1,3,7,8,10,11,12
துலாம் / 2,3,6,7,8,11,12
விருச்சிகம் / 2,3,4,5,6,9,11
தணுசு / 2,4,6,7,8,9,11
மகரம் / 2,4,7,8,10,11
கும்பம் / 2,3,9,10,11,12
மீனம் / 1,4,5,7,10,11,12
C.S.மல்லீஸ்குமார்
சென்னை
No comments:
Post a Comment