காரிய உடலில் மஹா காரணத்தை (ஆத்மா) தாங்கி "கர்மவினையில்" பயணிக்கும் நமக்கு 24 மணி நேரமும் தன்னுணர்வில் இருக்க வாய்ப்பில்லை. அதாவது லீலையில் இருந்து கொண்டு நித்தியமாய் மாறும் தன்மை என்பது மீண்டும் தாயின் கருவறைக்குள் பயணிக்கும் நிலைப்பாடு போலாகும். ஆனால் இயல்பிலோ அல்லது தியானத்திலோ அந்நிலை சில வினாடிகள் அல்லது நாழிகைகள் மட்டும் வாய்க்கப்பெற்று தன்னுணர்வின் ஏகாந்தத்தில் (பரமசுகம்) லயித்திருக்கலாம். அதுவே மனமில்லா/காலமில்லா "காலபைரவ" நிலையாகும். ஆனால், இந்நிலை தொடர்ந்து நீடித்து ஏதுமற்ற நிலைக்குள் பரிணமித்தால் அதுவே "சதாசிவபிரம்மேந்திரம்" ஆகும், தவிர மற்ற நேரங்களில் கிருஷ்ண பிரேமையான லீலையில்தான் லயித்திருப்போம். அதுவே "பிரம்மை" என்றும் "மாயை" என்றும் அழைக்கப்படும்!
கிருஷ்ண பிரேமையில் "பஞ்சபூதமாகிய" இருப்போடு "நவக்கிரகமாகிய" இயக்கம் சேர்ந்து, அதில் சூட்சுமமாகிய "மனமும்" லயித்து உலகம் உண்டாகும்.
C.S.மல்லீஸ்குமார்
சென்னை
No comments:
Post a Comment