1. நீதிதேவனான சனிபகவானின் மகரத்தை ராசி அல்லது லக்கினமாகக் கொண்டவர்கள் நீதி, நேர்மை, ஞாயம் மற்றும் சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்கள்
2. காலபுருஷனுக்கு மகரம் கர்ம (ஜீவனம்) ஸ்தானமாக வருவதால் மகரத்தான் கடும் உழைப்பாளிகள், பிறரின் வளர்ச்சிக்கு தன்னை பலிகடாவாக்கிக் கொள்ளும் தன்மை கொண்டவர்கள்
3. பிரகஸ்பதி குரு நீசமாகும் மகரத்தை ராசி மற்றும் லக்கினமாகக் கொண்டவர்கள் வாழ்வின் ஒரு பகுதியில் ஏமாளிகளாகவும், பிறப்பிலேயே அதீத ஆன்மீக சிந்தனையை அடித்தளமாகவும் கொண்டிருப்பர்
4. செவ்வாய் உச்சமாகும் மகரம் அழுத்தம், பிடிவாதம் போன்ற குணங்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும், எடுத்த காரியத்தை பின்வாங்காமல் தீவிரமாகச் செய்து முடிக்கும் மனோவேகம் கொண்டது
5. சூரிய/சந்திரர்களின் திரிஜென்ம நட்சத்திரங்களைக் (அபிஜித்) கொண்ட மகரத்தான் சொல் மற்றும் செயலில் வசீகரமும், சாஸ்திர வித்தைகளில் சாதுர்யமும், எதிரிகளை எளிதில் வென்று சிம்ம சொப்பனமாய்த் திகழும் பேராற்றலையும் கொண்டவர்கள்
6. ஆரோகண/ஆதாரச்சக்கரத்தில் ஆக்னாவான மகரம் மெய்ஞானத்தின் அடிநாதமாக இருப்பதால் உலகப் புரிதல், இயற்கைப் புரிதல் மற்றும் சகலசம்பத்துகளில் ஞானப் பிளம்பாகும்!
C.S.மல்லீஸ் குமார்
சென்னை
No comments:
Post a Comment