ஒருவருடைய உடல் கட்டமைப்பு மற்றொருவரின் உடல் கட்டமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபடும். அதன் அடிப்படையில்தான் யோகாசன/தியானப் பயிற்சிகள் குருமார்களால் வழங்கப்படும். அதனால், யாராக இருந்தாலும் தியானம் பழகும் காலங்களில் அவரவர் குருநாதரின் கண்காணிப்பில் இருந்து பழகுவது மிக மிக அவசியம். தவிர, குருமுகமின்றி தாமாகவே யோகம் அல்லது தியானம் செய்ய முயன்றால் அதனால் வரும் உடல் உபாதகளை நீங்கள் அனுபவித்தே ஆகவேண்டும்.
உதாரணமாக:−
1. கண், நாசி, செவி, மர்ம உறுப்புகள் மற்றும் மலத்துவாரங்களில் இரத்தக் கசிவு ஏற்படலாம்
2. மூக்கடைப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் உண்டாகலாம்
3. பெண்களுக்கு கடுமையான வயிற்று வலி உண்டாகி மாதவிலக்கு பிரச்சனைகள் (over bleeding) வரலாம்
4. வாதம்/கபம்/பித்தம் ஆகிய மும்மலங்களின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு உடல் உபாதைகள் வரலாம்
5. சூன்யாவிற்குள் மனம் சென்று திரும்பி வெளியேற இயலாமல் கோமா (சமாதி) நிலைக்குச் செல்ல நேரிடலாம்
C.S.மல்லீஸ்குமார்
சென்னை
No comments:
Post a Comment