Monday, 28 September 2020

பிரபஞ்ச தத்துவம்

ஒரு பொருள் எங்கிருந்து பிறந்ததோ அங்குதான் அது ஒடுங்கவும் செய்யும். அதாவது, சிவத்தில் சக்தி ஒடுங்குமே தவிர, சக்தியில் சிவம் ஒருபோதும் ஒடுங்காது.

காரணம், பிரளயத்தின்போது பராபரமாகிய பிரம்மத்தில் பரம் தோன்றி; பரத்தில் சிவம் தோன்றி; சிவத்தில் சக்தி தோன்றியது. அதுபோலவே, சக்தி சிவத்தில் ஒடுங்கி, சிவம் பரத்தில் ஒடுங்கி, பரம் பிரம்மத்தில் ஒடுங்கும். இதுவே சிவசக்தி, பரமசிவம் மற்றும் பரப்பிரம்மம் ஆகும். இத்தன்மையே அண்டத்திலும் (புறம்) பிண்டத்திலும் (அகம்) வியாபிக்கிறது.

எனவே, சிவத்திலிருந்து சக்தி தோன்றினால் அது #லீலை. ஆனால் சிவத்தில் சக்தியானது ஒடுங்கினால் அது #நித்தியம். இதை எப்படி பிறித்தரிவதெனில், நாம் பூமியானது லீலையாகிய மாயை ஆகும். இங்கு சூரியனானது (சிவம்) சந்திரனில் (சக்தி) ஒடுங்கி பௌர்ணமி போன்ற மாயைப் பிம்பம் உண்டாகுமே தவிர நிஜத்தில் சூரியனானது சந்திரனில் ஒடுங்கவே ஒடுங்காது. அதாவது மாயையாகிய பூமிக்கே இந்த இருபடி (அமாவாசை/பௌர்ணமி) பிம்பங்கள் பிரதானமாகும்.

இன்னும் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டுமெனில்,

#சிவம்/புரோட்டான்/இருப்பு
#சக்தி/எலெக்டரான்/இயக்கம்

எலெக்ரான் புரோட்டானை சுற்றுமே தவிர, புரோட்டான் எலெக்ட்ரானை ஒருபோதும் சுற்றாது. காரணம், புரோட்டான் நிலையானது.

எனவே, சிவமானது சக்தியில் ஒடுங்கினால் அச்சிருஷ்ட்டி அழிந்துவிடும். இதுபற்றி அறிவியலில் "பொருண்மை அழியா விதி" என ஒரு கோட்பாடுண்டு!

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

No comments:

Post a Comment