Monday, 28 September 2020

ஐவகை அக்கினிகள்

நம் உடலின் ஆத்மாவானது ஐந்து வகையான வெப்பத்தை (சூட்டை) தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும். அவை,

1.மோக அக்கினி −அடைய முற்படுவது
2. போக அக்கினி −பசி உணர்வு
3. காம அக்கினி −அடைந்து வெளிப்படுத்துவது
4. தாப க்கினி −அடைந்ததை மீண்டும் அடையத்துடிப்பது
5. ஞான அக்கினி −ஆனந்த நிலையில் லயித்திருப்பது

இவை சிவத்தின் ஐந்து தன்மைகளாகும்:

1. ந/மோகம் (மண்ணில் தீ) − #ருத்ர
2. ம/போகம் (நீரில் தீ) − #அர்த்தநாரீ
3. சி/காமம் (நெருப்பில் தீ) − #காலபைவ
4.வா/தாபம் (காற்றில் தீ) − #நடராஜ
5. ய/ஞானம் (ஆகாயத்தில் தீ) − #சதாசிவ

இவற்றின் முழுமையே ஆத்மவாவின் தன்மையாகும். இங்கு,

"மோகம்" என்பது ஒரு பொருளை அல்லது செயலையை நோக்கிய ஆசை, தூண்டுதல் அல்லது தீவிரம் எனக்கொள்ளலாம். 

"போகம்" என்பது தூண்டப்பட்ட விசயத்தை செயல்படுத்துவதாகும்.

"காமம்" என்பது அச்செயலால் உண்டான தன்மையை அடைந்துணர்ந்து வெளிப்படுத்துவது ஆகும். உதாரணமாக நாம் எச்சிலைக் காரி உமிழ்வதும், சுக்கிலத்தை வெளியேற்றுவதும், தாய் தன் குழந்தைக்கு பாலூட்டும் அனைத்து வெளிப்பாடுளுமே காமமேயாகும்.

 "தாபம்" என்பது மேலே பெற்ற அனுபவங்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் அடைய முற்படுவது.

"ஞானம்" என்பது அனைத்தின் பூரணமாகிய ஆனந்த நிலையில் லயித்திருப்பதாகும்.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

No comments:

Post a Comment