Monday, 28 September 2020

நிசப்தம் (அமைதி):

அமைதி என்கிற ஒன்று இவ்வுலகில் கிடையாது. அது நம் புலனுக்கு மட்டுமே விசயம், தவிர பரந்து விரிந்த இவ்வுலகம் அமைதியாய் இருப்பதாகத் தோன்றினாலும் அதை உற்று நோக்கினால் இரைச்சல்கள் இருப்பதை உணரலாம். ஏனெனில் அமைதி என்பதே இரைச்சலுடன் கூடிய சப்தமாகும். காரணம் இப்பிரபஞ்சம் என்பது ஓசை வடிவானது. அது சப்தத்தால் எங்கும் நிரப்பப்பட்டுள்ளது. எனவே அப்பிரபஞ்சத்தின் ஒரு அங்கமான நமக்கும் இது பொருத்தும். இத்தன்மையை ஆழ்ந்த தியானத்தில் நன்றாகவே உணரலாம்.

உதாரணமாக, எக்காளம் என்கிற மீயொலியையும் ( >20,000dB), உயிரோசை என்கிற சிற்றொலியையும் ( <20dB) நம் செவியால் உணர இயலாது. அதாவது குறிப்பிட்ட ஒலி அளவீடுகளுக்குள் (20−20,000dB) இயங்கும் சப்தங்களை மட்டுமே நம் செவியால் உணர இயலும். அதனால் உணர இயலாத சப்தங்கள் நிசப்தமாத் தெரியுமே, தவிர அது நிசப்தமாகாது.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

No comments:

Post a Comment