Monday, 28 September 2020

நவக்கிரக ஸ்தலங்களும்; மறைக்கப்பட்ட உண்மைகளும்

தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து நவக்கிரகக் கோவில்களிலும் மூலவர் சிவனாகவும், கிரக சிலையை தனியாகவும் வைத்திருப்பர். உண்மையில் தனியாக வைக்கப்பட்டிருக்கும் கிரகமானது உற்சவரே, தவிர அக்கோவிலில் பிரதானமாக இருக்கும் மூலவரிடத்து அக்கிரக சக்திகள் (மந்திர/யந்திர) தீர்மானிக்கப்பட்டிருக்கும். அங்குதான் அக்கிரத்தின் சக்தியோட்டம் அபரிவிதமாக வெளிப்படும்.

அதாவது, எந்த ஒரு நவக்கிர சக்தியும் தனித்து இயங்காது. காரணம், அவற்றின் இயக்க பரிணாமத்திற்கு பஞ்சபூதத் தன்மைகள் அல்லது தத்துவங்களின் சேர்க்கை மிகமிக அவசியம். நான் ஏற்கனவே எம் பதிவுகளில் குறிப்பிட்டிருந்த தன்மை மற்றும் தத்துவங்களைக் கீழே காணலாம்:−

தத்துவங்கள்/தன்மைகள்

ந−மண்/ருத்ரன்
ம−நீ்ர்/அர்த்தநாரீ
சி−நெருப்பு/காலபைரவ
வா−காற்று/நடராஜ
ய−ஆகாயம்/சதாசிவ

ஆக மேற்கூறிய தன்மை/தத்துவங்களுக்கு ஏற்றார்போல நவக்கிரக சக்திகள் மந்திர/யந்திரமாகவோ அல்லது அவ்விடத்தில் இயற்கையாக விரவிக்கிடக்கும் நவக்கிர சக்தியை ஒருமித்தோ அவற்றை பஞ்சபூதத்துடன் சேர்த்து தீர்மானித்து, அக்கலவையை நம் ஸ்தூல உட்கிரகித்தலுக்கு காரியமாகிக்கியுள்ளனர், தவிர எந்த ஒரு நவக்கிரகமும் பஞ்சபூத அம்சமில்லாமல் தனித்து இயங்காது. இங்கு, பஞ்சபூதம்−காரணம்; நவக்கிரகம்−காரியம்.

நவக்கிரக_ஸ்தலங்கள்

1. ஆடுதுறை / சிவசூரியனார் + சூரியன்
2. திங்களூர் / கைலாசநாதர் + சந்திரன்
3. சீர்காழி / வைத்தீஸ்வரர் + செவ்வாய்
4. திருவெண்காடு / சுவேதாரண்யேஸ்வரர் + புதன்
5. ஆலங்குடி / ஆபத்சகாயேஸ்வரர் + குரு
6. கஞ்சனூர் / அக்னீஸ்வரர் + சுக்கிரன்
7. திருநள்ளாறு / தர்பாரண்யேஸ்வரர் + சனி
8. திருநாகேஷ்வரம் / நாகநாதர் + ராகு
9. கீழ்ப்பெரும்பள்ளம் / நாகநாதர் + கேது

ஆக, உற்சவ கிரகத்தை தரிசிப்பதற்காக வரிசைகளில் நின்று கஷ்டப்படுவதை விடுத்து, பஞ்சபூத/நவக்கிரக சக்திகள் பிரதானமாக தீர்மானிக்கப்பட்டிருக்கும் மூலவரை தரிஷித்து அனுக்கிரகம் பெறுங்கள்.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

No comments:

Post a Comment