காரணமான ஆத்மாவிற்கும், காரியமான உடலுக்கும் நடுநிலைக் காரணியாய் இருக்கும் அந்தக்கரணமே "சித்தமாகும்". இதுவே #மனமானது நினைப்பதற்கும், #புத்தியானது நிச்சயிப்பதற்கும் மற்றும் #அகங்காரமானது கொண்டெழுப்புதற்கும் மூலகாரணமாய் இருக்கிறது. இவற்றின் முழுமையே தெளிந்த நீரோடையான அறிவேயாகும். இதில்தான் ஆத்மாவிலிருக்கும் ஜென்மாதி ஜென்ம கர்மப் பதிவுகளும், தலைமுறை தலைமுறைகளாய் ஸ்தூலத்தில் (உடல்) பதிந்திருக்கும் மரபணு விசயங்களும் ஒன்றாய் பரிணமித்திருக்கும் ஆழ்நிலைப் பதிவுகளாகும் (Sub-conscious memory).
உதாரணமாக:
1. ஆத்மா−Super conscious or Tertiary memory
2. சித்தம்−Subconscious or Secondary memory
3. மனம்−Conscious or Local or Primary memory
C.S.மல்லீஸ் குமார்
சென்னை
No comments:
Post a Comment