Monday, 28 September 2020

பூரணத்துவம்

நிறைவு அல்லது முழுமை அல்லது பூரணம் என்பது புத்தியால்/அறிவால் படித்தறிந்து அல்லது பொருளறிந்து அறியக்கூடிய புறவிசயம் அன்று

இல்லையெனில் முழுயடைந்தவர்கள் அட்சரமாக எழுதி வைத்த பாடல்களை அறிவால் பொருளறிந்த அனைவரும் அல்லது யாரேனும் ஒருவராவது முழுமையடைந்திருக்க வேண்டும்

ஆனால் இதுவரை அப்படியேதும் நடக்கவில்லை, ஏனெனில் அவை முழுக்க முழுக்க அறிவு சார்ந்த விசயம் மட்டுமே

காரணம் ஒருவரின் உணர்வுநிலையை அறிவு நிலையாக்கி, அதை மற்றொருவரின் உணர்வு நிலையாக்குவது என்பது சாத்தியமே இல்லை. இதன்படியே ஞானிகளும் கருத்தில் வேறுபடுகிறார்கள்

ஏனெனில அறிவும் உணர்வும் எதிரெதிர் துருவங்கள்

எனவே அவர்வர் உணர்தல் அவருக்கு விசயம், தவிர முரண்பாடு என்பது கட்டமைப்புத் தன்மைகளின் (குணபேதம்) வேறுபாட்டால் உண்டாவதேயாகும்

எனவே, நாம் கண்டது, கேட்டது, படித்தது, விவாதித்தது, சுயமாக உணர்ந்தது ஆகிய அனைத்தின் புரிதல் எல்லாமே அறிவாக மட்டுமே வெளிப்படும், தவிர அது முழுமையாகாது

காரணம், எப்போதெல்லாம் ஒரு கருத்து வெளிப்படுகிறதோ அது அறிவேயாகும் ஏனெனில் அறிவு தன்னை வெளிப்படுத்திக் காட்டி நிருபணம் தேடும். ஆனால், ஞானத்திற்கு எவ்விதமான வேத விளக்க நிரூபணங்கள் தேவைப்படாது

அதாவது நான் நானாக இருக்கிறேன் என்பதற்கு எந்த விளக்கமும் தேவையில்லை

அதாவது நாம் என்னதான் வேத வியாக்கான விளக்கங்கள் கூறினாலும் அவையனைத்துமே அறிவு சார்ந்த விசயங்களேயன்றி பூரணமாகாது

இதில் விசயம் என்னவெனில் அவரவர் நிலைப்பாட்டிற்கு தத்தம் கருத்துக்கள் பிரதானமாக இருக்கும் ஆனால் இவை அனைத்துமே அவரவர் அனுபவ அறிவே தவிர அது பூரணமாகிய ஞானமாகாது

காரணம் ஞானம் என்பது தன்னை ஒருபோதும் வெளிப்படுத்திக் காட்டாது மேலும், அது மற்றவரின் அறிவு/உணர்வு நிலையோடு முட்டி நிருபிக்கவும் செய்யாது. 

ஆக அறிவே அகங்காரத்தைக் கொண்டெழுப்பி தன்னை வெளிப்படுத்துவதொடு மட்டுமின்றி நிருபணம் தேடி ஒன்றறொடொன்று முட்டி மோதும்

உதாரணமாக,

ஒரு செடி செடியாக இருக்கிறது அது மரகமாகவில்லை என்றும்; மரமானது பூக்கவில்லை என்றும்; பூத்திருக்கிறது ஆனால் காய்க்கவில்லை என்றும்; காய்த்திருக்கிறது ஆனால் கனியவில்லை என்றும்; கனிந்திருக்கிறது ஆனால் கனியை உதிர்க்கவில்லை என்றும் தன்னறிவால் விளக்கலாமே தவிர

செடி மரமாகவேண்டும் என்றும்; மரம் பூக்க வேண்டும் என்றும்; அது காய் காய்த்து கனிய வேண்டும் என்றும் நிர்பந்திக்க முடியாது

காரணம், நிகழ்வில் அது என்ன நிலையில் இருக்கிறதோ அதுவே அதற்கு "முழுமை அல்லது பூரணம்"

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

No comments:

Post a Comment