Monday, 28 September 2020

தன்னுணர்வு

நம் உடலில் ஆத்மாவானது நிலைபெற்று இருக்கும்வரை நம் உணர்வு நிலை என்பது மாறாதது. அதையே பிரக்ஞை என்று கூறுவார்கள். காரணம் ஆத்ம ஒளியானது உடலுடன் சேர்ந்தால்தான் அங்கு உணர்வே பிறக்கும், தவிர ஆத்மாவிற்கு தனிப்பட்ட உணர்வு நிலை என்பது கிடையாது.

அப்படியிருக்க இங்கு உடலும் ஆத்ம ஒளியைத் தொடர்புகொள்ளும் ஒரு கருவியாக இருந்து நமக்கு உணர்வு நிலை உண்டாக ஓர் காரியப்பொருளாய் இருக்கிறது. அப்படியான தன்னுணர்வு நிலைக்கு (விழிப்பு நிலை) தடையாய் இருப்பது நம் மனமேயாகும். 

அந்த மனம் என்பதே இருப்பின் (ஆத்மா) சலனமேயன்றி வேறில்லை. ஆனால் அதை அது அறியாமல் அது எங்கோ வெளியே இருப்பது போன்ற மாயைத் தோற்றத்தை ஐம்புலன்களினூடே உண்டுபண்ணி, காண்பதெல்லாம் நிஜம் எனக் கொள்கிறது. ஆக சலனமாகிய மனம் அது உருவான மூலத்தில் நிலைபெறும்போது நம் உணர்வுநிலையில் இருக்கிறோம் என்கிற விழிப்புநிலை உண்டாகிறது.

உதாரணமாக, சூரிய ஒளியை யாராலும் நேரடியாகக் கண்ணால் காண இயலாது, தவிர அது ஏதாவது ஒரு திடப்பொருளில் பட்டு பிரதிபலித்தால் மட்டுமே அதை நாம் ஒளி என்று உணர்கிறோம். அதுபோலவே, நம் ஆன்மா உடலுடன் சேர்ந்து உணர்வுகள் பிறக்கிறது. அது எவ்வாறு பலவிதமான உணர்வு நிலைகளாக மாறுகிறது என்பதை எம் அடுத்தடுத்த பதிவுகளில் காண்போமாக.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

No comments:

Post a Comment