Monday, 12 December 2016

நவக்கிரகங்களின்_பார்வை (3,4,5,7,8,9,10):

எந்த ஒரு கிரகத்துக்கும் தனிப்பட்ட அல்லது குறிப்பிட்ட பார்வை என்பது கிடையாது. கிரக பார்வை என்பதன் தீர்மானமே #நம்மைச்சார்ந்த (ஸ்தூலம்) விசயம்தான், தவிர வானத்திலிருக்கும் கிரகத்துக்கு கிடையாது. உதாரணமாக, ஒட்டுமொத்த கிரகங்களின் ஒளி/மின்காந்த அலைக்கற்றைகள் (Light Electro Magnetic Radiation) சூரியனால் பிரதிபலிக்கப்பட்டு #ஃபோட்டான்களாய் (Photons) #சப்தஸ்வரங்களால் (Spectrum) கடத்தப்பட்டு சலனமாய் வளியெங்கும் பரவுகிறது.

அதாவது, வளிமண்டலமெங்கும் அக்கிரகங்களின் #ஒளியும்−#ஒலியுமான (இருப்பு/இயக்கம்) ஃபோட்டோன்களாய் சப்தஸ்வரங்களால் பரவியிருக்கிறது. அவை நம்மில் #ஐம்புலன்களினூடே (கண், காது, மூக்கு, வாய், மெய்/சருமம்) ஊடுறுவி நம் உடலில் ஏற்கனவே அமைக்கப்படுள்ள கிரக கட்டமைப்புக்கு ஏற்றார் போல உட்கிரகிக்கப்படுகிறது, அதில் #சுவாசமே பிரதானமாய் இருக்கிறது. மேலும், கிரக செயல்பாடுகள் அனைத்துமே #ஸ்தூலம் சார்ந்த விசயங்கள், அவை ஸ்தூலத்திற்கு மட்டுமே விசயம்.

இங்குதான் விசயமே இருக்கிறது. அதாவது, ஒரு #மனிதன் ஜனித்தபோது (முதல் சுவாசும் எடுத்த போது) #புறத்தில் என்ன கிரக அமைப்பு இருந்தனவோ அதுவே அம்மனிதனின் #அகத்தின் (ஸ்தூலம்) கிரக−கட்டுமானமாகும் (Base construction). எனவே அக்கிரக்கட்டுமானத்தின் அடிப்படையில்தான் ஒளி/மின்காந்த அலைகளின் #உட்கிரகித்தலும் (Absorption) இருக்கும், இது மனிதருக்கு மனிதர் வித்தியாசப்படும்.

ஆனால் கிரகபார்வை என்று தீர்மானிக்கப்பட்டது என்னவெனில், ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினையுண்டு (Opposite reaction) என்கிற தத்துவத்தின் அடைப்பையில் அனைத்துக் கிரகங்களுக்கும் 7ம் பார்வை உண்டு என்பது தெளிவாகிறது. அதாவது 7ம் பாவத்திற்கான அனைத்து கிரகங்களின் ஃபோட்டான்கள் உட்கிரகிப்பு நம் உடலில் பிரதானமாக இருக்கும். அதுபோல #சனி, #செவ்வாய் மற்றும் #குருவின் 3,4,5/8,9,10 ஆகிய பார்வைகளின் தீர்மானங்கள் அக்கிரகங்களின் காரகத்துவம் மற்றும் பாவங்களின் (காலபுருஷனின் வீடுகளான விருச்சிகம்/தனுசு/மகரம்) அடிப்படையில் தீர்மானிக்கப் பட்டிருக்கவேண்டும். அதாவது அதன் அடிப்படையிலே ஃபோட்டான்களின் உட்கிரகித்தல் உடலுக்கு பிரதானமாகக் கிடைக்கும் என்பதையே குறிப்பிட்ட பார்வையாகச் சொல்லியிருக்கிறார்கள்.

நான் உணர்ந்த காலம் (தன்னிலையும்/முன்னிலையும்)

உயிர்−#தன்னிலை
உலகம்−#முன்னிலை
இறை−#படர்க்கை

நான் என்கிற தன்னிலை #இருப்பாகவும், அது சிருஷ்டியாகப் பரந்து, விரிந்து உலகமாகிய #இயக்கமாகவும் இருப்பதாலேயே படர்க்கையாகிய "இறைவன்" என்பது நமக்கு எட்டாக்கனியாய் இருக்கிறது. காரணம், இறையை உணர்வதென்பது காலத்தின் தீர்மானத்தில்தான் இருக்கிறது. உதாரணமாக:−

//கடவுள் பாதி, மிருகம் பாதி,
கலந்து செய்த, கலவை நான்,

வெளியே #மிருகம், உள்ளே #கடவுள்,
விளங்க முடியாக் கவிதை நான்,

மிருகம் கொன்று, மிருகம் கொன்று,
கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்,

ஆனால்…
கடவுள் கொன்று, உணவாய் தின்று,
மிருகம் மட்டும், வளர்கிறதே...!!!

நந்தகுமரா, நந்தகுமாரா,
நாளை மிருகம் கொல்வாயா?
மிருகம் கொன்ற, எச்சம் கொண்டு,
மீண்டும் கடவுள் செய்வாயா?

குரங்கிலிருந்து, மனிதன் என்றால்,
மனிதன் இரையாய் ஜனிப்பானா?
மிருக ஜாதியில், பிறந்த மனிதா,
தெய்வ ஜோதியில் கலப்பாயா?//

#அத்வைதத்தின் உச்சம், இப்பாடலின் பொருள்...!!!! 2003 களில் வெளிவந்த இப்பாடலை பலநூறு முறைகள் கேட்டிருப்பினும், அஃது ஓர் #அனுமானமாய் விளங்கினாலும், 12 வருடங்கள் கழித்தே அதன் உண்மை சாரம் (சுத்தாத்வைதம்) #அனுபவமாகப் புரிந்தது. இதுவே "காலத்தின் தீர்மாமனமுமாய் இருக்கிறது" என்பதையும் உணரமுடிகிறது. ஆக, காலத்திலிருந்து கொண்டு காலத்தை தீர்மானிக்க நாம் யார்..? அதாவது, அது அப்படித்தான் நடக்கவேண்டும், இது இப்படித்தான் இருக்கவேண்டும், என்கிற தீர்மானம் நம் கையில் இல்லை என்பதுமே தெளிவாக விளங்குகிறது...!!!

உதாரணமாக, ஒரு வித்தின் தன்மை #இருப்பாய் (தன்னிலை) விதையினுள் இருப்பினும், அது #காலத்தால் பரிணமித்து #சிருஷ்டியாய் விரியும் போதுதான் அதன் குணபேத மாற்றங்கள் (செடி/மரம்/பூ/கனி/விதை) உலகமாய்/முன்னிலையாய் வெளிப்படுகிறது, தவிர கட்டாயத்தால் நாம் அதை தீர்மானித்து வெளிக்கொணர முடிவதில்லை, என்பதுவே #அறிவாகவும், அவ்வித்தின் இருப்பை காலதீதனமாக உணர்வது என்பது #ஞானமாகவும் விளங்குகிறது.

முதல் 12−#அறியாமை
2வது 12−#அனுமானம்
3வது 12−#அனுபவம்
4வது 12− #அறிவு
5வது 12−#ஞானம்

கர்மாவும்_பரிகாரமும்

கர்மா என்பது  நமக்கு விசயமாகும்போது அது #காலத்தால் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளது. அதாவது, காலத்திற்கு அப்பார்ப்பட்ட கர்மச்செயல்பாடுகள் என்று இவ்வுலகில் எதுவும் இல்லை. மேலும் காலத்துடன் #இடமும், #பொருளும் ஒன்றுசேர அங்கு பலனாய் #நிமித்தமும் வந்துவிடுகிறது. அதாவது இடத்திற்கும், பொருளுக்கும் தகுந்தவாறே காலத்துடன்கூடிய நிமித்தமும் விழைகிறது.

காலமாகிய கர்மாவின் பரிமாணங்கள்:−

1. #சஞ்சீதம் (முன்பிறவி/இறந்தகாலம்)
2. #பிரார்ப்தம் (காமிய−நிஷ்காமிய/நிகழ்வு)
3. #ஆகாமியம் (எதிர்காலம்/அடுத்தபிறவி)

அதுபோல #பரிகாரம் என்பது #தோஷத்தை குறைத்தோ அல்லது #யோகத்தை கூட்டியோ அல்லது மாற்றியோ செய்யப்படும் #ஆகாமியக் கர்மாவாகும். அதாவது, சொல்லப்படும் பரிகாரம் என்பது எதிர்காலமாகிய  #ஆகாமிய கர்மாவில் அடங்கும். இதுவே அடுத்த பிறவிக்கு #சஞ்சீத கர்மாவாகக் கொண்டு செல்லப்படும். மேலும், எந்தப் பரிகாரம் எங்கு, எப்படிச் செய்யவேண்டும், அது எவ்வாறு வேலை செய்யும் என்பதெல்லாம் அதை சரியாக கணித்துக்கூறுவரிடத்தில் உள்ளது என்பதுவே மக்களின் புரிதலாக இருக்கவேண்டும்.

உதாரணம், ஒருவருக்கு உடலில் #விட்டமின் A குறைவு எனில், #விட்டமின் B மாத்திரையை சாப்பிட்டால் உடலுக்கு #விட்டமின் A கிடைத்துவிடாது, அது சரியான பரிகாரமும் ஆகாது. எனவே பரிகாரம் என்பது எதைச் சார்ந்தது என்பதன் அடிப்படைப் புரிதலும் மக்களுக்கு மிக அவசியமாகிறது.

அதாவது பரிகாரம் பற்றி பலருக்கும் மாற்றுக்கருத்து உண்டு, அது என்னவெனில், விதிக்கப்பட்ட கட்டமைப்பை  பரிகாரத்தால் மாற்றியமைக்கவே இயலாது என்பதேயாகும். ஆம், அது உண்மையே ஆனால் பரிகாரத்தால் மாற்றியக்கக்கூடிய கர்ம செயல்பாடுகளும் நம்மில் உண்டு. அதன் தெளிவை கீழே காணலாம்.

1. சஞ்சீதம்−#ஜாதகம் (கர்மவினையால் விதிக்கப்பட்ட ஜனனகால கிரக அமைப்பு, இதை மாற்ற இயலாது

2. பிரார்ப்தமாகிய காமிய/நிஷ்காமியம்−#கோள்சாரம் (அதாவது விதிக்கப்பட்டதன் செயல்பாடு)

3. ஆகாமியம்−#தசா/#புக்தி/#அந்தரம் (இதுவே பரிகாரத்தை செயல்படுத்தப் பயன்படும் எதிர்காலக் கர்மவினையாகும்).

Thursday, 1 September 2016

மெய்ஞானம்

அழியக்கூடிய #ஐம்புலனறிவை (அஞ்ஞானம்) பிரதானமாகக் கொண்டால் அழிவில்லா #ஆத்மஞானத்தை (மெய்ஞானம்) உணர்வது எங்கனம்..?

#ஆத்மஞானம் என்பது விளக்கத்துடன் கூடிய மெய்யுணர்வாகும். அதுவே நம் #ஆதார_சக்திமையம் ஆகும்.

அம்மெய்யுணர்வான #ஆத்மஞானத்தை அடைய #பிரம்மையுடன் கூடிய புலனறிவை (மாயை/பொய்யறிவு) அது உருவான மூலமான #பிரம்மத்திலே நிறுத்த வேண்டும்...!

இல்லையெனில் அஃது புறத்தில்/முன்னிலையில் #கேள்விகளையும் #அகங்காரத்தை மட்டுமே கொண்டெழுப்பி இறுதிவரை உண்மையை உணராமல் #அழிந்துபடும்..!!

//விண்டவர் கண்டிலர்
கண்டவர் விண்டிலர்//

#ஆத்மவிசாரம் அவசியம்...!!!

ஐவகை அக்கினிகள்

நம்முள் நம் #ஆத்மாவால் கொண்டெழுப்பப்படும் ஐவகையான அக்கினிகள்:

1. #போகாக்கினி−பசி (உடலை வளர்ப்பது)
2. #மோகாக்கினி−மோகம் (ஏதாவதொன்றை அடைய முற்படுவது)
3. #காமாக்கினி−காமம் (அடைவது/லயிப்பது)
4. #தாபாக்கினி−பேராசை (அடைந்ததை மறுபடியும் அடையத்துடிப்பது)
5. #யோகாக்கினி−யோகம்/ஞானம் (அனைத்தயும் துறப்பது/முக்திக்கானது)

முதல் நான்கும் பரீட்சையமிருந்தால் மட்டுமே கடையானது இயல்பாகவே கைவரப்பெறும்..! இதுவே பொதுவான கர்மவினையுமாகும்..!!

நமசிவாய

நம் உடலானது பஞ்ச பூதங்களால் 
வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனாலேயே அது பூதவுடல். அதுபோல மனிதனின் அறிவுசார் நிலைகளும் ஐந்து படிநிலைகளைக் கொண்டது. அவை,

#பஞ்ச/பூதம் (கிரக தன்மை) − நிலை

ந/மண் (புதன்)− அறியாமை (innocence)
ம/நீர் (சுக்கிரன்) − அனுமானம் (guessing)
சி/நெருப்பு (செவ்வாய்) − அனுபவம் (experince)
வா/காற்று (சனி) − அறிவு (knowledge)
ய/ஆகாயம் (குரு)− ஞானம் (wisdom)

இவை ஸ்தூலம் மற்றும் சூட்சும விசயங்கள் சார்ந்தவை. ஸ்தூலமானது பூதமாகவும் சூட்சுமமானது கிரகமாகவும் பரிணமித்திருக்கும். மேற்கூறியபடி ஒவ்வொரு பூதத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் தன்மை உண்டு. அதுபோல ஒவ்வொரு பருவ நிலைக்கும் சில குறிப்பிட்ட கிரகங்களின் ஆளுமை பிரதானமாயிருக்கும். அதாவது,

நிலை − கிரக/ஆளுமை:

1. அறியாமை − சூ, சந்
2. அனுமானம் − செ, பு, சு
3. அனுபவம் − சனி, ராகு
4. அறிவு − குரு
5. ஞானம் − கேது

அறியாமை அனுமானமாகி
அனுமானம் அனுபவமாகி
அனுபவம் அறிவாகி
அறிவு ஞானமாகும்!

உடலின் இத்தைகைய பஞ்சபூத மற்றும் நவக்கிரக கலவைகளின் கட்டமைப்பைப் (Constrctive design) பொருத்து இதன் அளவீடு நபருக்கு நபர் மாறுபடும். அதாவது, ஒருவர் மற்றொருவரிடமிருந்து மனத்தால், புத்தியால், அறிவால் வேறுபடுவது மேற்கூறிய பஞ்சபூத மற்றும் நவக்கிரகக் கலவைகளின் கட்டமைப்பைப் பொருத்தே அமையும்!

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

திரு_அம்பலச்_சக்கரம் (சிதம்பர−சக்கரம்)

"சிதம்பர சக்கரம் தான் அறிவார்-இந்த
சீமையில் உள்ள பெரியோர்கள் சிதம்பர சக்கரம் தானும் என்றால்−அதற்குள் தெய்வத்தை யல்லோ அறியவேணும்".

எனச் சிதம்பர சக்கரத்தின் விளக்கத்தை #வள்ளலார் (இராமலிங்க அடிகள்) தனது அகவலில் தெளிவாக எழுதியுள்ளார். மேலும் அது பஞ்சபூத #பஞ்சாட்சரமாகிய−"நமசிவாய" என்பதைத்தவிர வேறில்லை.

ஆக #பஞ்சபூதங்கள் இறையின் அம்சமேயாகும். அதாவது, உலகில் காணப்படுகின்ற ஒவ்வொரு பொருளும், பஞ்சபூதத்தால் அல்லது பஞ்சபூதத்தின் ஒரு கூறினால் ஆனவையே. பஞ்சபூதமானது #உருவமாயும், #அருவமாயும் எங்கும் நிறைந்துள்ளது. நிலம், நீர் தீ, காற்று மற்றும் வெட்டவெளியாகிய ஆகாயம் அண்டத்தில் இருப்பது போல் பிண்டமாகிய நமது உடலாகவும், உடலுக்குள்ளும் உள்ளது.

பஞ்சபூதங்களாவன:
மண், நீர், தீ, வாயு, ஆகாயம். இவை #பஞ்சாட்சரமாகும் (நமசிவாய).

#ந−பிருதிவி-மண்
#ம−அப்பு-நீர்
#சி−தேயு-தீ
#வா−வாயு-காற்று
#ய−ஆகாயம்-வெளி

ஆன்மீகத்தின் ரகசியமான முறைகள் மற்றும்
சூட்சமங்கள் உங்களுக்குள் கேள்வியாய்
உதித்து அதை நோக்கி பயணிக்க வைக்கும்.
விடை என்பது எப்படி எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம். "சிதம்பர சக்கரத்தை" #ஸ்தூலம், #சூட்சமம், #காரணம் என பல பிரிவுகளில்விளக்கிக் கொண்டு செல்லலாம். இப்பதிவில் #சரத்தால் (சுவாசத்தால்) ஏற்படும் மாற்றத்தையும் அதில் இப்பூதங்களில் செயல்பாடுகளைக் காண்போம்.

சரமானது #மண்ணை சார்ந்து நடக்கும்போது (ஆரம்பம்/முடிவு):

மண்ணில்/மண்−எதிலும் நிறைவுண்டாகும்,
மண்ணில்/நீர்−அடிசேரலாம்
மண்ணில்/காற்று−அலைந்து அலைந்து
அவனடி சேர்வர்,
மண்ணில்/நெருப்பு−உடல் உஷ்ணம்
அதிகமாகும்,
மண்ணின்/ஆகாயம்−பிடி கிடைக்காமல்
சுற்றிக்கொண்டே இருப்பர்.

சரமானது #நீரை சார்ந்து நடக்கும்போது (ஆரம்பம்/முடிவு):

நீரில்/நிலம்−கலத்தல் எனும் ஐக்கிய
பாதையான சமாதி நிலையை அடையலாம்,
நீரில்/நீர்−எல்லாவற்றிலும் வளர்ச்சி,
நீரில்/நெருப்பு−உடல் குளிர்ச்சியாகும்,
நீரில்/காற்று−அமிர்தம் சுரக்கும்,
நீரில்/ஆகாயம்−அப்படியே சில நிமிடங்கள் அதிர்ந்து போய் இருக்கும் நிலையில்
இம்மூச்சு ஓடும்.

சரமானது #தீயை சார்ந்து நடக்கும்போது (ஆரம்பம்/முடிவு):

தீயில்/மண்−ஆயுள் நீட்டிப்பு,
தீயில்/நீர்−ஆயுள் குறைவு,
தீயில்/தீ−இருநிலை மாற்றம்,
தீயில்/காற்று−மயக்கத் தோற்றத்தை
உருவாக்கும்,
தீயில்/ஆகாயம்−புவிஈர்ப்பு விசையை மீற
முடியும்.

சரமானது #காற்றை சார்ந்து நடக்கும்போது (ஆரம்பம்/முடிவு):

காற்றில்/மண்−நோய் அறிகுறி,
காற்றில்/நீர்−விந்து மேலேறும்,
காற்றில்/தீ−உடம்பில் தீயின் சுழற்சியை
காணலாம்,
காற்றில்/காற்று−காந்தவியல் அழுத்தம்
மேற்பட்டு தலை கணக்கும், நாதம் கேட்கும்,
காற்றில்/ஆகாயம்−பாவபுண்ணியம் கலைந்து எரிந்துவிடும் நிலை.

சரமானது #ஆகாயத்தை சார்ந்து நடந்தால் (ஆரம்பம்/முடிவு):

ஆகாயத்தில்/மண்−உச்சி திறக்கும்,
தியானத்திற்கு உகந்தது,
ஆகாயத்தில்/நீர்−சக்தியானது இடம்விட்டு இடம் நகரும்,
ஆகாயத்தில்/காற்று−விசுத்தியில் நிற்கும்,
ஆகாயத்தில்/தீ−பரமாத்மாவை
தெளிவாக காணலாம்,
ஆகாயத்தில்/ஆகாயம்−இருள் நிலை, மாயை,
முழு ஞானம் உற்பத்தியாகும்.

மேலும் #சந்திரகலை (சக்தி) குளிர்ச்சியாக இருப்பதால் அது உஷ்ணத்தை நாடி செல்லும், இதில்தான் #அறிவு உதிக்கின்றது. இதேபோல் #சூரியகலை (சிவன்) உஷ்ணமானதால் குளிர்ச்சியை நோக்கி
செல்லும், இதில் #மாயை அல்லது #பிரமை
உண்டாகின்றது. பிரமை என்பது #பிரம்மதோடு_இணைந்திருப்பது என்ற பொருளாகும். இந்த வேறுபாடுகளை கொண்டு நீங்களே உங்கள் உள்நிலையும் உங்கள் வெளி உலக நிலையையும் துல்லியமாக ஒப்பிட்டு பார்த்து
கொள்ளலாம்.

#அண்டத்தில் உள்ளதெல்லாம் #பிண்டத்தில்
என்பதற்கு ஏற்றாற் போல் இந்த பிண்டத்தில்
(உடலில்) பஞ்சபூத சரத்தால் என்னென்ன
மாற்றம் ஏற்படுகின்றதோ அதேபோல்
அண்டமாகிய பிரபஞ்சத்திலும் மாற்றம் நிகழும். இதுவே நம் உடலுக்கு உள்ளும்−வெளியும் நிகழ்பவை.

#பிருதவியில் ஏற்படும் மாற்றம்:

மண்ணை/மண்ணில் போட்டால்−நிறையும்,
மண்ணை/நீரில்−அடி செல்லும்,
மண்ணை/காற்றில்−அலைந்து வேறிடம் பின்பு கீழ் அடிவிழும்,
மண்ணை/தீயில்−உஷ்ணமாகும்,
மண்ணை/ஆகாயத்தில்−சுழலும்.

#அப்புவில் ஏற்படும் மாற்றம்:

நீரை/மண்ணில் கலந்தால்−பரவும்,
நீரை/நீரில்−பெருகும்,
நீரை/தீயில்−குளிர்ச்சி,
நீரை/காற்றில்−ஆவியாகி மேகமாகி மழை
வரும்,
நீரை/ஆகாயத்தில்−உறை நிலை.

#தேயுவால் ஏற்படும் மாற்றம்:

தீயை/மண்ணில் போட்டால்−அழியாநிலை
(உஷ்ணம்),
தீயை/நீரில்−அழிவுநிலை,
தீயை/தீயில்−இருநிலை மாற்றம்,
தீயை/காற்றில்−அனல், கானல்நீர், வெக்கை,
உருக்கம்,
தீயை/ஆகாயத்தில்−குமிழாகி பறக்கும்.

#வாயுவால் ஏற்படும் மாற்றம்:

காற்றை/மண்ணில்−விரிசல்,
காற்றை/நீரில்−நீர் சுழற்சி,
காற்றை/தீயில்−தீ சுழற்சி,
காற்றை/காற்றில்−காந்தவியல் அழுத்தம்,
காற்றை/ஆகாயத்தில்−மேகம் கலையும்.

#ஆகாயத்தால் ஏற்படும் மாற்றம்:

ஆகாயத்தை/மண்ணில்−பிரளயம், தியானம்,
ஆகாயத்தை/நீரில்−புவி நகரும், இடமாறும்,
ஆகாயத்தை/தீயில்−ஒளி பெருகும்,
ஆகாயத்தை/காற்றில்−கடல்நீர் உள்வாங்கும்,
ஆகாயத்தை/ஆகாயத்தில்−இருநிலை, மாயை, பிரமை.

நம் #ஸ்தூல_சூட்சும சரீரங்களில் ஸ்தூலமாக
மற்றும் சூட்சுமமாக நடைபெறும் காரண
காரியங்களுக்கு பஞ்சபூதங்களின் பயன்பாடு
பற்றி காண்போம்.

#ஸ்தூல_பஞ்சீகரணம்:

மண்ணில்/மண்−உடலில் சக்தி
குறைந்து அசதி ஏற்படும்.
மண்ணில்/நீர்−உடலில் மாமிசம்
உருவாகின்றது,
மண்ணில்/தீ−சருமமாகிய தோல்
உருவாகின்றது,
மண்ணில்/வாயு−நரம்புகளும்,
மண்ணில்/ஆகாயம்−ரோமமும்,

நீரில்/நீர்−சிறுநீரும்,
நீரில்/மண்−உமிழ்நீரும்,
நீரில்/வாயு−உதிரமும்,
நீிரில்/தீ−வியர்வையும்,
நீரில்/ஆகாயம்−சுக்கிலமும்,

தீயில்/தீ−நேத்திர கண்ணும்,
தீயில்/ஆகாயம்−செவியும்,
தீயில்/வாயு−சரீரமும்,
தீயில்/நீர்−வாயும் நாக்கும்,
தீயில்/மண்−நாசியும்,

காற்றில்/மண்−இருதயமும் பிராணக் காற்றும்,
காற்றில்/நீர்−குதமும் அபான வாயுவும்,
காற்றில்/காற்று−சர்வ நாதங்களும்
வியானனும்,
காற்றில்/தீ−கழுத்தும் உதானனும்,
காற்றில்/ஆகாயம்−தொப்புளும், சமானனும்,

ஆகாயத்தில்/மண்−இருதயமும்,
ஆகாயத்தில்/நீர்−நாசியில் பித்தமும்,
ஆகாயத்தில்/தீ−மார்பும்,
ஆகாயத்தில்/காற்று−கண்டமும்,
ஆகாயத்தில்/ஆகாயம்−சிவமும்
உருவாகின்றன.

#சூட்சும_பஞ்சீகரணம்:

மண்ணில்/மண்−கலந்து குதமும்,
மண்ணில்/நீர்−குய்யமும்,
மண்ணில்/தீ−கைகளும்,
மண்ணில்/காற்று−பாதங்களும்,
மண்ணில்/ஆகாயம்−வாக்கும்,

நீரில்/ஆகாயம்−சத்தமும்,
நீரில்/காற்று−தொடு உணர்வும்,
நீரில்/தீ−பார்வையும்,
நீரில்/நீர்−சுவையும்,
நீரில்/மண்−வாசனையும்,

தீயில்/தீ−பசியாகிய தீபாக்கினியும்,
தீயில்/மண்−தாகமும்,
தீயில்/நீர்−தூக்கமும்,
தீயில்/காற்று−கொட்டாவியும்,
தீயில்/ஆகாயம்−சங்கமமாகிய கலத்தலும்,

வாயுவில்/வாயு−ஓட்டமும்,
வாயுவில்/நீர்−இருத்தலும்,
வாயுவில்/தீ−தத்தித்தத்தலும்,
வாயுவில்/மண்−நடத்தலும்,
வாயுவில்/ஆகாயம்−படுத்தலும்,

ஆகாயத்தில்/மண்−ஆசையும் அகங்காரமும்,
ஆகாயத்தில்/நீர்−துவேசமும்,
ஆகாயத்தில்/தீ−பயமும்,
ஆகாயத்தில்/காற்று−வெட்கமும்,
ஆகாயத்தில்/ஆகாயம்−மோகமும் உருவாகின்றன

ஆக, இதன் மூலம் ஒரு பூதமானது மற்றைய
பூதங்களில் கலந்து உடலிலும்−வெளியிலும்,
ஸ்தூலமாகவும்−சூட்சமமாகவும் ஏற்படும்
மாற்றங்களையும், பஞ்சபூதங்களே பிறக்கும்
முன் தாயின் கருவிலும், பிறந்தபின்
வெளியிலும் உடல் உறுப்புகள் உருவாவதற்கு
காரணமாகும். மேலும் நமக்கு ஏற்படும்
#ஆணவம், #கோபம், #ஆசை போன்றவற்றிற்கும் இப்பூதங்களே காரணகாரியமாகும்.