Monday, 8 August 2016

மனம் என்கிற #மாயையின் சக்தி

மனத்தின் வெளிப்பாடு தான் #உலகம். மனிதன் பிறப்பதற்குமுன் மனம் என்ற ஒன்று இல்லை, அது உண்டாகாது. மனம் என்பது இந்த பூமியில் பிறந்தவுடன் வருவது ஆகும்.

#மனம் என்பது ஐம்புலனுகர்ச்சியான
கண்− பார்ப்பதாலும்
காது− கேட்பதாலும்
மூக்கு− நுகர்வதாலும்
வாய்− சொல் மற்றும் சுவைப்பதாலும்
தோலின்− தொடு உணர்வாலும்

நாளடைவில் உருவாகும்.

ஆக, ஏதாவது ஒன்று இயங்கினால் மட்டுமே மனம் உருவாகும். மூன்று மாதங்கள் சென்ற பின் மூளை வளர்ச்சிபெறத் தொடங்கும். நாம் அதை "அறிவு" என்று அழைகின்றோம். மிருகங்களுக்கு அறிவு மட்டும் வளரும்.
ஆனால் மனிதனுக்கோ மனமும் அறிவும் சேர்ந்து வளரும். எனவே மனம் என்ற ஒன்று மனித இனத்திற்கு மட்டுமே உண்டு.

"மனம் இருப்பதாலேயே அவன் மனிதன்".
மனிதன் என்ற தமிழ் சொல்லுக்கு அழிவில்லாதவன் என்று பொருள்.

#மா அல்லது #ம என்றால் மனம்
#நீ அல்லது #நி என்றால் தான் அல்லது தனக்கு
#தன் என்றால் தன்னகத்தே கொண்டுள்ள, அதாவது மற்றதர்கல்ல

ம +நீ + தன் = மனிதன்
அதாவது, மனத்தை தன்னகத்தை கொண்டுள்ளவன் "மனிதன்"

மேலும், மனமானது எதை உள் வாங்குகிறதோ, அது அதுவாக மாறும் தன்மை கொண்டது. ஜீவனின் சலனம் மனம்.

கோவில்களின்_ரகசியங்களும்_அவற்றின்_சூட்சுமப்பின்னனிகளும்

"நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ"

என #சிவவாக்கியரும்,

"வல்லவர்போல் வேதபுரா ணங்காவ் யங்கள்;
மந்திரங்கள் கோடானு கோடி யென்றும்
சொல்லுவார்;
கோவிலென்றுந் தீர்த்த மென்றுந்; திருடர்கள்தா னலைந்தலைந்து திரிவார் மட்டை;
வெல்வதொரு பிரமநிலை யறியா மற்றான்; வேரற்ற மரம்போலே விழுவார் பாரே"

எனக் #காகபுசண்டரும், கோவில் மற்றும் விக்கிரக வழிபாடுகளை வெகுவாகப் பழித்துக்கூறினாலும்,

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று"

என #ஔவையாரும்,

"கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"

என #முதுமொழிகள் பலவாறு கோவில்களின் சிறப்பை முன்னிறுத்திக்கூறுவதால் ஏன் கோவில்கள் நிறுவப்பட்டன என்றும், நாம் ஏன் கோவிலுக்குச் செல்லவேண்டும் என்று நம்மை ஆழமாகச் சிந்திக்க வைக்கிறது. இதற்கான காரண−காரியப் பின்னனிகளையும், நான் அறிந்துணர்ந்த விசயங்களையும், நண்பர்களாகிய உங்கள் அனைவரிமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

#ஆலயம்−ஆன்மா லயிக்குமிடம் என்றும்; #கோவில்−இறைவனுடைய இல்லம் என்றும் விளக்கங்கள் கூறப்பட்டாலும், கோவில்கள் நிறுவப்பட்டதை நான்கு நிலைகளாக #ஆகமகங்கள் குறிப்பிடுகின்றன. அவை,

1. #தைவிகம்−புண்ணிய ஆத்மாக்களாலும்
2. #ஆசுரம்−அசுரர்களாலும்
3. #ஆர்ஷம்−முனிவர்களாலும், ரிஷிகளாலும்
4. #மாநுஷம்−அரசர்களாலும், மக்களாலும்.

இங்கு #ஆகமங்கள் என்பது எவ்விடத்தில், எந்த தன்மைகளில், எப்படிப்பட்ட கோவில்களை நிறுவவேண்டுமென்ற #ஆகமவிதிகள் கொண்ட தொகுப்பாகும். மேலும் இதை தத்துவ ரீதியாகக் கூறவெண்டுமெனில் "ஆகதம்−கதம்−மதம்" என்பதன் முதல் எழுத்துக்களே ஆகமங்களாயின, அதாவது

#ஆகதம்−வந்தது (சிவனிடமிருந்து)
#கதம்−சென்றது (சிவனிமிருந்து சக்திக்கு)
#மதம்−மதித்துப்போற்றப்பட்டது (சக்தியிடமிருந்து விஷ்ணு மற்றும் ஏனையவர்களுக்கு) என்றும் கூறுபவரும் உண்டு.

அதாவது ஆகம விதிப்படி ஒரு கோவிலை நிறுவ, அவ்விடத்தின் தன்மையை (பஞ்சபூத/நவக்கிரக) முதலில் அறியவேண்டும் அல்லது எவ்விடத்தில் அம்மாதிரியான தன்மைகள் இருக்கிறதோ அவ்விடங்களில் அத்தன்மைகளுக்குண்டான விருட்சங்களை பயிரிட்டும் அல்லது அவ்விடங்களில் இருக்கும் #உயிர்ப்புள்ள_ஜீவன்களின் (ஜீவசமாதி) அதிர்வலைகளை வைத்தும் தீர்மானித்தனர். உதாரணமாக தேவ விருட்சங்கள் என்று கூறப்படும் #அரசு, #நாகலிங்கம், #வில்வம், #மருதம் மற்றும் #வெண்நாவல் ஆகியவை குறிப்பிட்ட பஞ்ச பூதத்தன்மைகள் அல்லது தத்துவங்கள் இருக்குமிடங்களில் மட்டுமே வளரக்கூடியவை அல்லது அம்மாதிரியான விருட்சகங்கள் எவ்விடத்தில் வளர்கிறதோ அவ்விடத்தில் அத்தன்மைகளுக்கான கோவில்களைத் தீர்மானித்தனர்.

இயற்கையாகவே #மலைகள் மற்றும் #நதிநிலைகளில் அத்தன்மைகள் அதிகமாக காணப்படுவதால் அவ்விடங்களில் ஆகம விதிகள் கொண்டு கோவில்களைத் தீர்மானித்தனர். அது மட்டுமில்லாது #அக்னி கொண்டு பூஜைகளாலும் #மந்திரங்களாலும் சக்தியோடங்களை ஓரிடத்தில் நிலைநிறுத்தியும், நீர்நிலைகளை அமைத்தும் அவ்விடத்தில் கோவில்களைத் தீர்மானித்தனர்.

பொதுவாக கோவில்களின் தன்மைகளைப் பொறுத்து அவற்றை மூன்று விதங்களாகப் பிரித்துக்கூறலாம். அவை,

1. #ஸ்தூலம் (உடல்)
2. #சூட்சுமம் (மனம்)
3. #சூன்யம் (உயிர்/ஆன்மா)

அதாவது, பெரும்பாலான கோவில்கள் ஸ்தூலம் சார்ந்த விசயங்களை முன்னிறுத்தியே தீர்மானிக்கப்பட்டுள்ளன, காரணம் ஸ்தூலமாகிய நம் #உடலை #ஸ்திரப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஆகும், எனில் ஏன் உடலை ஸ்திரப்படுத்ர வேண்டுமென்பதை நாம் #திருமூலரின் பாடலைக்கொண்டே அறியலாம், அது என்னவெனில்,

"உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்"

என்பதுவே ஆகும். ஆக, அகத்திலிருக்கும் இறைவனைத் (உயிர்/ஆன்மா) தாங்கி நிற்கும் நம் ஸ்தூலமாகிய கோவிலை (உடலை) #ஸ்திரப்படுத்துவது அவசியமாகிறது. மேலும் ஸ்தூல விசயங்களெனில் அங்கு #பஞ்சபூதங்களும், #நவக்கிரகங்களும் வந்துவிடுகின்றன. ஏனெனில் உடல் செயல்பாட்டிற்கும், நவக்கிரக செயல்பாடுகளுக்கும் (கதிர்வலைகள்) #சார்புடையதாவே #இச்சிருஷ்யும் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, நாம் ஜனித்தநாள் முதல் உடலானது, புலன்களினூடே கிரகங்களின் ஒளி/மின்காந்த கதிர்வலைகளால் (Photo/Elecro/magnetic radiations) தொடர்புபட்டுள்ளது.

எனவேதான் #ஜோதிடத்தில் நவக்கிரகங்களின் செயல்பாடுகள் பிரதானமாக்கூறப்பட்டு, #பரிகாரங்களாய் கோவில்களுக்குப் போகச்சொல்கின்றனர். எனவே, #பஞ்சபூதத்தன்மைகள் (ருத்ர, அர்த்தநாரி, காலபைரவ, நடராஜ, சதாசிவா) மற்றும் #தத்துவங்கள் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) நவக்கிர கதிர்வீச்சுகளுக்கு ஏற்றார்போல் கலந்து அமைக்கப்பட்டு ஆகம விதிகள் கொண்டு அவ்விடங்களில் கோவில்களைத் தீர்மானித்தனர். மேலும், ஸ்தூல விசயங்களுக்காக தீர்மானிக்கப்பட்ட கோவில்களில் பஞ்சபூத−நவக்கிர தன்மைகள் எவ்வாறு நமக்குள் கிரகிக்கப்படுகிறதென்றும் நான் முன்னரே என்னுடைய கட்டுரைகளில் (நானும்−கோவிலும்) பதிவிட்டுள்ளேன்.

மேற்கூறப்பட்ட ஸ்தூல சம்பந்தமுடைய கோவில்கள் பெரும்பாலும் #சைவசித்தாந்தக் கோவில்களாகவே இருக்கிறது. அவை சிவன் (பஞ்சபூத) அல்லது சிவ−நவக்கிர கோவில்களாகவும், முருகன், அம்மன் விநாயகர் மற்றும் ஏனைய தெய்வங்களின் பெயர்களில் குறிப்பிட்ட தன்மைகள் அல்லது கிரக சக்தியை பிரதானமாகக்கொண்டு தீர்மானித்துள்ளனர். ஆனால் #வைணவ (பெருமாள்) கோவில்கள் அனைத்துமே சூட்சுமமாகிய #மனம் சார்ந்த விசயங்களின் அடைப்படைலேயே தீர்மானித்துள்ளனர். அதாவது, எல்லாப் பெருமாள் அல்லது விஷ்ணு கோவில்களிலும் மனம் லயிக்கும் விதமான ஆடம்பர கட்டிட அமைப்புகள், வாசனைப் பொருட்கள் (ஜவ்வாது−சந்தனம், வெண்ணெய், துளசி, மரிக்கொழுந்து) மற்றும் ஆபரணங்களைக் கொண்டும் அமைக்கப்பட்டிருக்கும். மேலும் அங்கு இயல், இசை, நாட்டிய அரங்கேற்றங்களும் நடைபெறும்விதமாக உருவாக்கப்பட்டிருக்கும். அதுமிட்டுமில்லாது ஒரு ஹாஸ்யமான சுற்றுச்சூழலை நாம் அங்கு உணரமுடியும். மாறாக சைவசித்தாந்த சிவன் கோவில்களில் மயான அமைதியும், இருட்டுமாகிய தன்மையை உணரலாம்.

ஆனால் #சூன்யம் சார்ந்த கோவில்கள் என்பது அங்கு #உயிர்ப்புள்ள ஜிவனின் அலைகள் (அல்லது) புண்ணிய ஆத்மாக்களால் விக்கிரங்கள் (அல்லது) லிங்கங்கள் வைத்து பூஜிக்கப்பட்ட ஸ்தலங்களாகும். அவை சூட்சுமத்தை #ஸ்திரப்படுத்தும் விசயங்களாகும். எனவே அங்கு பஞ்ச பூதத்தன்மையோ அல்லது கிரக கதிர்வீச்சுகளோ பிரதானமாக இருப்பதற்குச் சாத்தியமில்லை, காரணம் அங்கு உயிர்ப்புள்ள #ஜீவனே_சிவமாகி அங்கு வரும் ஆத்மாக்களுடன் தொடர்புகொண்டு நல்லதொரு #அதிர்வலைகளை சூட்சுமமாக ஏற்படுத்துகின்றன. அதாவது பஞ்சபூத/நவக்கிரக கோவில்களைத் தவிர அனைத்து சிவன்கோவில்களுமே உயிர்ப்புள்ள ஜீவனின் #சமாதியே ஆகும். அவ்வாறு ஜீவசமாதியானவர்களின் மேல்பகுதிகளில் சிவலிங்கத்தை வைத்து கோவிலாகத் தீர்மானித்தனர்.

சைவசித்தாந்தக் கோவில்களைத்தவிர #பௌத்த மதக் கோவில்களும் ஜிவனின் உயிர்ப்புள்ள ஸ்தலங்களே ஆகும். மேலும் #கிறித்துவ மற்றும் #இஸ்லாமியக் கோவில்களும் #சூன்யம் சம்பந்தமுடைய தன்மைகளைக்கொண்டே நிறுவப்படிருக்கும். எவ்வாறெனில் அங்கு பிரபஞ்ச சக்திகளான ஒளி மற்றும் ஒலியை (சப்த ஸ்வரங்களாகிய வேத மந்திரங்கள், மணியோசைகள்) பிரதானமாகக் கொண்டிருப்பதை நாம் அறியலாம். ஏனெனில் இறைவன் #ஒளியாகவும் (ஆன்மா), #ஒலியாகவும் (உயிர்) இருக்கிறான் என்பதை அனைத்து மத நூல்களை (வேதம்/பைபிள்/குர்ரான்) ஆழமாகக் கற்றறிந்தவர்கள் நன்கு அறிவர்.

அதாவது ஒளியில் ஒலி (noise) இருப்பதையும், ஒலியில் ஒளி (photon) இருப்பதையும் அறிவியல் பூர்வமாக அறியலாம். மேலும் ஒளி−ஒலியானது நம்மில் (உடலில்) எவ்வாறு தொடர்பு படுகிறதென்பதை அடுத்தாக வரும் பதிவுகளில் விளக்கமாகப் பதிகிறேன். ஆக, கோவில்கள் ஏன் நிறுவப்பட்டன மற்றும் எவ்வாறு தீர்மானிக்கப்பட்டன என்பதையும், அங்கு செல்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகளையும் என்னால் இயன்றவரை எடுத்துக்கூறியுள்ளேன். மேலும் இது அனைவருக்கும் பயன்படும்விதமாக நீங்கள் அனைவரும் இப்பதிவை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டி விழைகிறேன். நன்றி

#நானும்_கோவிலும் (பாகம்−3)

#திரு+#நளன்+#ஆறு_தர்பாரண்யேஸ்வரர் (#சனீஸ்வரர்−#உடணுறை)

நெடுநாளாய் எழுதவேண்டுமென நினைத்து, காரணமே தெரியாத சில காரணங்களால் இக்கோவிலைப் பற்றி என்னால் எழுதமுடியாமல் போனது, ஆனால் இன்று இக்கோவிலைப்பற்றி எழுதியே தீரவேண்டுமென்ற வைராக்கியத்துடன் சனியின் காரகமாகிய இரவில் (இருட்டு) எழுதுகிறேன். இதுவரை மக்களால் அறியப்படாத சில உண்மைகளுடன், நான் அங்கு சென்று உணர்ந்த தன்மைகளையும் நண்பர்களாகிய உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தலைப்பையும், படத்தையும் பார்த்துவிட்டு உங்கள் அனைவருக்கும் ஒரு சந்தேகம் வந்திருக்கலாம், #திருநள்ளாறில் #சனீஸ்வரன்தானே பிரதானம், அதென்ன #தர்பாரண்பேஸ்வரர் என்று, இப்பதிவின் நோக்கமே இங்குதான் அடங்கியுள்ளது, அதற்குமுன் சிந்தனைக்குரிய சில கேள்விகளும், அதற்குப்பின் விளக்கங்களையும் கூறுகிறேன். மேலும் பரிகாரம் எப்படி வேலை செய்கிறது என்பதன் புரிமாணத்தை இப்பதிவில் முடிந்த அளவில் எழுத முயல்கிறேன்.

பெரும்பாலான மக்களைப் பொருத்தவரை சனிபகவான் என்பவர் கெட்டவராகவும், சனீஸ்வரன் கோவிலுக்குச் சென்றால் அங்கு கொண்டுசென்ற பூஜைப் பொருட்களை அங்கேயே விட்டுவிடுவதுமே வழக்கமாய் இருந்துவருகிறது. ஆனால் திருநள்ளாறுக்கு கொண்டுசென்ற பூஜைப்பொருட்களை வீட்டிற்கு எடுத்துச்செல்லாம் என்பார்கள், காரணம் அங்கிருக்கும் சனீஸ்வரன் #அனுக்கிரகமூர்த்தியாக அருள்பாலிக்கிறாராம், அப்படியென்றால் என்ன...? திடீரென்று சனீஸ்வரன் எப்படி அங்கு மட்டும் நல்லவரானார்..? ஏனெனில் சனீஸ்வரர் இங்கு அனுக்கிரகமூர்த்தியாக இருப்பதற்கு மூலகாரணமாக இருப்பவர் #தர்பாரண்யேஸ்வரர் ஆவார்.

அதாவது எந்த ஒரு நவக்கிரகக் கோயிலானாலும் அங்கு மூலவராக இருந்து அருள்பாலிப்பது எம்பெருமான் #சிவனே ஆவார். இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று உறுதி செய்துகொள்ளலாம். ஆக, ஏன் நவக்கிரகக்கோவில்களில் #சிவபெருமான் மூலவராக இருக்கவேண்டும் என்றால், நவக்கிரக கோவில்களில் அக்கிரகங்களின் #கதிர்வீச்சுகள் மிகுதியாகக் கிடைக்கப்பெற்றாலும் அக்கதிர்வீச்சை அல்லது #அத்தன்மையை நம்மில் கிரகிக்க (to resonate into our body) நமக்கு #பஞ்சபூதத்தின் உதவி அவசியம். அதாவது பஞ்சபூதம் என்றாலே அங்கு "நமசிவாய" என்பதைத்தவிர வேறில்லை என்பதை நாம் நன்கு அறிவோம். ஆக பஞ்சபூதத்

#தத்துவங்களாக:−
#ந−மண்
#ம−நீர்
#சி−நெருப்பு
#வா−காற்று
#ய−ஆகாயம் எனவும்;

#தன்மைகளாக:−
#ந−ருத்திரன்
#ம−அர்த்தநாரி
#சி−காலபைரவர்
#வா−நடராஜர்
#ய−சதாசிவமாய் எங்கும் பரவியிருக்கிறார்.

இங்கு விசயம் என்னவெனில், ஒரு கிரகத்தின் #வேகம் மற்றும் #தன்மையைப் பொறுத்து, அதாவது #கதிர்வீச்சைப்பொறுத்து பஞ்சபூத சிவமானவர் அதனுடன் ஒன்றாய்க் கலந்து அவற்றை நமக்குள் #கிரகிக்க (to resonate) அருள்பாலிப்பார். உதாரணம் ராகு போன்ற வீரியமிக்க கிரகமெனில் அதனை ஈடுகட்டும் வகையில் #காலபைரவ (zero state) தன்மையும்; சனியைப்போல மந்தன் எனில் (inert gas) அதனை சமப்படுத்த தீவிரனாகிய #ருத்ர தன்மை கலந்திருக்கும். ஆக இங்கு மந்தனாகிய சனியின் கதிர்வீச்சை (Ultra Vilolet like rays) நமக்குள் கிரகிக்க இங்கு தர்பாரண்யேஸ்வரர் #ருத்திரனாக அருள்பாலிப்பதாலேயே இங்கு சனிபகவான் அனுக்கிரமூர்த்தியாகிறார்.

#நானுணர்ந்த_ருத்திரன்:

சனியாகிய மந்தனின் மற்றொரு காரகம் #குளுமை. அதாவது, இங்கிருக்கும் கதிர்விச்சுத்தன்மையான #குளுமையை நம் அனைவராலும் நன்றாகவே உணரமுடியும், ஆனால் மந்தனின் அக்கதிர்வீச்சை நமக்குள் செலுத்த (to inject) ருத்ரனாகிய இயக்கம் தேவை. எனவேதான் இங்கு ருத்திரனாக தர்பாரண்யேஸ்வர் அருள்பாலிக்கிறார். இதை நான் எவ்வாறு அறிந்துணர்ந்தேன் எனில், மூலவர் தர்பாரண்யேஸ்வர் அர்த்தமண்டபத்தில் தியானத்தில் அமர்ந்து இருக்கும்போது #சந்திரகலையும் (குளுமை), #சூரியகலையும் (வெப்பம்) தாறுமாறாக மாறி மாறி ஓடி என் நாடியின் தன்மையை மாற்றியமைத்துக்கொண்டே இருந்தது. பொதுவாக சுவாச மாற்றமானது குறைந்தது இரண்டுமணி நேரங்களுக்கு ஒருமுறை மட்டுமே மாறிமாறி ஓடும், ஆனால் அங்கோ ஒருமணி நேரத்தில் பலமுறை மாறிமாறி ஒடியதுமட்டுமில்லாமல் உடலில் நாடியின் வேகத்தையும் அதிகரித்தது, அதுமட்டுமில்லாமல் என்னால் அங்கு இயல்பாக அமர்ந்து அமைதியான ஆழ்ந்த தியானத்திற்குள் செல்லமுடியவில்லை, காரணம் அங்கு ஆக்கிரமித்திருக்கும் #ருத்திரனின் கட்டுக்கடங்கா வேகம் என் #மனத்தை சிதறடித்து, இருப்பினும் இதற்கு காரணம் என்னவென்றே விளங்காமல் வியர்த்து, விறுவிறுத்து வெளியே வந்து பார்த்தால், கோவில் கொடிமரத்தின் முன்மண்டபத்தில் #ருத்திர_பூஜைக்கான ஏற்பாடுகள் தடால்புடலாய் நடந்துகொண்டிருந்தது, பிறகுதான் விளங்கியது ருத்திர தன்மையை மெருகேற்றத்தானே (energy renewal) ருத்திர பூஜை நடத்துவார்கள், அப்போ அங்கே இருப்பது #ருத்திரன் என்பதை அறிவாலும் அறிந்து உறுதி செய்தேன்.

ஆக அங்கு #மந்தனாகிய_குளுமையும்; #ருத்ரனாகிய_வெப்பமும் ஒருசேர கலந்து நம்முள் கிரகிக்கப்படுவதால் ஏழரைச்சனி, அஷ்டம சனி, கண்ட சனி, அர்த்தாஷ்டம சனி என்று சனியின் குறைபாட்டால் மந்தமாக இருப்பவர்களுக்கும், மேலும் சனி தசையால் பெரிதுமாக பாதிகப்பட்டவர்களுக்கும் இந்த கலவை #பெருமருந்தாகும். காரணம் மந்தனாகிய சனியுடன், ருத்திர தன்மையும் கலந்திருப்பதால் உடலுக்கு ஆற்றலும், புத்துணர்ச்சியும் இயல்பாகவே கிடைக்கப்பெறும். அதாவது உடலில் சனித்தன்மை குறைந்திருப்பின் அதை அங்கிருக்கும் மந்தனின் கதிரை நமக்குள் தேவையான அளவு செலுத்தி, சமப்படுத்தியும் (maintaining equilibrium), மாறாக சனித்தன்மை அதிகமாக இருப்பின் அதைக்குறைப்பதுமே இங்கிருக்கும் ருத்திரனாகிய தர்பாரண்யேஸ்வரரின் முக்கிய வேலையாகும்.

#முடிவுரை:

எனவே திருநல்லாறுக்கு செல்லும் அன்பர்கள், வெளியே காட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருக்கும் சனீஸ்வரரை பக்தியுடன் வணங்குவது மட்டுமில்லாமல் விசயம் பொருந்திய மூலஸ்தானத்தில் (எந்திரங்கள், தகடுகள்) தீர்மாணிக்கப்பட்டுள்ள #சனி_ருத்திரக் கலவையை உங்களுக்குள் இலவசமாக கிரகித்துக்கொள்ளுங்கள். அதற்கு அங்கு குறைந்த பட்சம் இரண்டுமணி நேரமாவது இருப்பது அவசியமாகும். உடலின் வலிமைக்கு அல்லது உடலுக்கு சனித்தன்மை எந்த அளவிற்கு அவசியமென்பதை திரு. Astro Babu அய்யா அவர்களின் சனியின் காரத்துவ கட்டுரையைப் படித்து தெரிந்துகொள்ளவும். நன்றி

#நானும்_கோவிலும் (பாகம்−2)

#அருள்மிகு_சுயம்புநாத_சுவாமி_திருக்கோயில்

பேரளம், நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடிக்கு தெற்கே 3 கி.மீ. இக்கோயில் 5-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் #சுயம்புலிங்கமாக (அடி காணா ஆழம்) அருள்பாலிக்கிறார். அம்மன் #பவானியம்மன். அக்கினி தீர்த்தம் ஆலயத்திற்குக் கீழ் உள்ளது, தவிர #சனி, #ராகு மற்றும் #சந்திரன் இங்கு தனித்தனியாக உள்ளனர்.

தவத்தில் வல்லவரான #கார்ஷனாஜினி_மகரிஷி இத்தலத்தில் சுயம்புநாதரை நோக்கி பலஆண்டுகாலம் தவம்செய்து இப்புவியுல் உள்ள அனைத்து சிவஸ்தலங்களையும் ஒருங்கே காட்சியாக கண்ட ஸ்தலமாகும். மேலும்  #கலிதோஷத்தால் ஆன்மாக்களுக்கு ஏற்படும் துன்பங்களை இத்தல இறைவனை தரிசித்தவுடன் நீங்கவும், தன் பெயரால் இத்தலம் விளங்கவும் வரம் பெற்ற ஸ்தலமாகும்.

#ஸ்தல_சிறப்பு

இத்தலப் பெருமானாகிய சுயம்புநாதர் தன்னைப் பூசித்த #இந்திரனுக்குப் பெறுதற்கரிய பேற்றினைக் கொடுத்தார். #சூரியனுக்கு மிகுந்த ஒளியினை அளித்தார். யாக்ஞவல்கியர் பூசித்துப் பிரமஞானத்தைப் பெற்றார். #சுக்கிராசாரியர் வழிபட்டு இறந்தவரைப் பிழைப்பிக்கும் ஆற்றலைப் பெற்றார். #மார்கண்டேயர் வழிபட்டு நித்தியத்துவத்தையடைந்தார். #விசுவாமித்திரர் வழிபட்டு அதனால் க்ஷத்திரிய உடலைவிட்டு பிராமண்யத்தை அடைந்தார் என இத்தலபுராண வரலாறுகளாகும்.

#நானுணர்ந்த_சூன்யா:

இவ்வாறாக இக்கோவிலுக்கு புராண கதாப்பாத்திரங்கள் பலவாறு கூறப்பட்டாலும், நான் இன்று எதேச்சையாக இத்தலத்திற்குச் சென்று அறிந்த, உணர்ந்த விசயங்களை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்வதே என் பிரார்ப்தமாக கருதுகிறேன். அதாவது பேரள முனிவர் இங்கு கடுந்தவம் செய்து இறைவனின் திருவுருவக் காட்சியைக் கண்டதால் #தியானம்_செய்பவர்களும்; நவக்கிரகங்களில் சுக்கிரன் இறந்தவரை உயிர்ப்பிக்கும் வித்தையை இங்கு இறைவனிடம் பெற்றதால் இங்கு #ஜோதிடர்களுமே  அதிகமாக வருவதாக அங்கிருப்பவர் ஒருவர் மூலம் அறிந்தேன். மேலும் அமைதியான தியானத்தில் அமரும்போது, இங்கு இருக்கும் தன்மையை அறிவால் பகிரமுடியவில்லை என்பதுதான் நிதர்சனம். அதாவது, இத்தலம் சூன்யத்தின் கருவூலத்தை உணர, தியானம் செய்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இங்கு மனமானது ஒடுங்கி, இயல்பாகவே தியானநிலையை அடைவதுடன், சில வினாடிகள் #சூன்யாவாகவே மாற முடிந்தது எம் பாக்கியம், பராபரமே...!!!

#திருச்சிற்றம்பலம்

Friday, 15 April 2016

நானும்_கோவிலும் (#பாகம்−1)

(திருச்சிற்றம்பலம்)

"நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்தாள் வாழ்க, கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க, ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க, ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க−5"

"ஈசனடிபோற்றி
எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி
சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப்பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவனடி போற்றி−15" −#திருவாசகம்

"வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே"
−#கோளறு_திருப்பதிகம்.

#முன்னுரை:−

முதன்முயற்சியாக நான் உணர்ந்த இப்பிரபஞ்ச விசயங்களையும், நான்பெற்ற இன்பங்களையும் நண்பர்களாகிய உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். இப்புவியின் "ஆதார சக்திமையங்களாக" விளங்கும் #ஸ்தலங்களும், அவற்றின் #விருட்சங்களின் சக்திகளையும் நான் உணர்ந்த விசயங்களாய், அனுபவமாய், பரிகாரமாய் நண்பர்களுக்கு எடுத்துரைப்பதை என் பிரார்ப்தமாகக் கொண்டு ஏக இறைவனின் திருநாமத்தோடு ஆரம்பிக்கிறேன்.

#சிவ_ஸ்தலங்களும்−விருட்ச சாஸ்திரமும்:

"கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது பழமொழி அவ்வாறாக, இயற்கையின் கிரக சக்தியோட்டங்கள் பரவலாக மக்களுக்கு கிடைக்கும் வண்ணம், ஒரு குறிப்பிட்ட பகுதியில் பல ஆகம விதிகளின் (யாக−வேத மந்திரங்கள் மற்றும் யோக−முத்திரை பூஜைகள்) அடிப்படையில் கோவில்கள் தீர்மாணிக்கப்பட்டுள்ளது. தற்காலத்திலும் பலவிதமான கோவில்கள் எழுப்பப்பட்டாலும், சிவன் கோவில்கள் அமைக்கப்படுவது என்பது மிகஅரிதாய் இருக்கிறது. காரணம் பண்டையகால சிவன் கோவில்கள் ரிஷிகளாலும், சித்தர்களாலும், முனிவர்களாலும், ஞானிகளாலும், மிகப்பெரிய அரச பரம்பரை வழிவந்தவர்களால் மட்டுமே தீர்மாணித்து அமைக்கப்பட்டு வந்தது, மேலும் #பஞ்பூதசக்திகளைக் கண்டறிந்து, அவற்றை ஒரிடத்தில் நிலைநிறுத்துவதற்கு இயற்கையின் தன்மைகளை துள்ளியமாக அறியவேண்டியிருக்கிறது. இதன் அடிப்படையிலேயே இயற்கையின் தன்மைகளை அறிந்த வேத வித்தகர்களாலும், ஞானிகளாலும் இப்புவியெங்கும் பஞ்சபூதக் கோவில்கள் கொண்டு எழுப்பப்பட்டது, அல்லாமல் நினைத்த இடத்தில் நினைத்த மாதிரியாக ஏதாவது ஒரு இடத்தில் சிவன்கோவில் அமைப்பது என்பது இயலாத காரியமாகும்.

அப்படியாக கோவில்கள் அமைப்பதில் விருட்ச சாஸ்திரம் பெரிதும் துணைபுரிகிறது. பொதுவாக ஸ்தல விருட்சங்களில் அரசு, வில்வம் மற்றும் நாகலிங்க விருட்சங்கள் அதீத தெய்வீகத் தன்மையுடையது என்றும் அவை தேவலோக மரங்கள் என்றும் நாம் கேள்விப்பட்துண்டு, இதில் சிறப்பம்சம் என்னவெனில் இம்மூன்று விருட்ஷங்களும் தெய்வீகத்தன்மைகள் இருக்குமிடத்தில் மட்டுமே வளருமே, தவிர எல்லா இடங்களிலும் வளருவதில்லை. குறிப்பாக வில்வம் மற்றும் நாகலிங்க விருட்சங்கள் "பஞ்சபூதத் தத்துவங்கள் மற்றும் தன்மைகள்" விரவிக்கிடக்கும் இடங்களில் மட்டுமே வளரக்கூடியவை. ஆக அப்பஞ்ச பூதத்தன்மைகள் இருக்கும் இடங்களை அறிய இவ்விருட்சங்களைப் பயிரிட்டு, வளர்ந்ததும் கோவில் அமைத்தும் அல்லது சுயம்பாக வளர்ந்த விருட்சங்களின் அருகில் அதற்குண்டான கிரக சக்தியை தீர்மாணித்து கோவிலமைத்தனர்.

பஞ்சபூதத்தின் அம்சமாகிய சிவபெருமான் #ருத்ர, #அர்த்தநாரி, #காலபைரவ, #நடராஜ மற்றும் #சதாசிவ தன்மைகளாக எங்கும் வியாபித்திருக்கிறார். ஆக ஒவ்வொரு சிவ ஸ்தலங்களிலும் இவ்வைந்து தன்மைகளில் ஏதாவது ஒரு தன்மை கற்பகிரகத்தில் நிலை நிறுத்தப்படுகிறது. இதே போன்று மற்றபிற ஸ்தலங்களிலும் அக்கிரகதன்மையுள்ள சக்திகள் ஈர்க்கப்பட்டு, கற்பகிரகத்தில் நிர்ணயிக்கப்படுகின்றன. அப்படியான சக்திகளை நிலைநிறுத்த #கோபுர #கலசங்களும், #தெப்பங்களும், #ஸ்தலவிருட்சமும் (Aerial view point) ஆதார சக்தி மையங்களாக இருந்து குறிப்பிட்ட கதிர் வீச்சை பிரபஞ்சத்திலிருந்து ஈர்த்து கற்பகிரகத்திற்கு அளிக்கிறது. எனவே பெரும்பாலான சிவன்கோவில்கள் புராதண காலங்களில் ஆகம விதிகள் கொண்டு கட்டப்பட்டு இன்றுவரை பராமரிக்ககப்பட்டு வருகிறது, அந்த வரிசையில் பழம்பெரும் சிவன்கோவிலாகிய #ஶ்ரீவேதபுரீஸ்வரர் திருக்கோவிலைப் பற்றிதான் நான் விளக்கமாகக்கூற உள்ளேன்.

#ஶ்ரீவேதபுரீஸ்வரர்_மற்றும்_வேதநாயகி_அம்மன்_திருத்தலம் (இடம்: ஆலந்தூர், சென்னை):

#ஸ்தல_அமைப்பும்_வரலாறும்:

இத்தலத்தின் இருப்பு மற்றும் சக்தியோட்டத்தை முதன்முதலில் கண்டறிந்து தீர்மானித்தவர் #பிருங்கி #மகரிஷி என்றும், பிறகு இத்தலம் கி.பி 12ம் நூற்றாண்டு பல்லவ கால மன்னர்களால் உருவாக்கபட்ட, மஹா சக்திமிக்க சிவ ஸ்தலமாகும். இக்கோவிலில் வேதபுரீஸ்வரர் மூலவராய் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டு, மூலவருக்கு முன்புறத்தில் இட−வலமாய் முருகரும், விநாயகரும், மூலவரின் இடப்பக்கம் அதாவது, வடக்குப் பக்கத்தில் உடனுறை வேதநாயகி அம்மன் தெற்குமுகமாய் நிறுவபட்டும், ஈசானத்தில் நவக்கிரகங்களும், ஆலய முன்வாசலின் வலப்பக்கம் அதாவது, தெற்கு முகமாய் விநாயகரும், அதனைத் தொடர்ந்து மேற்கு முகமாய் சனீஸ்வரரும், மூலவரின் வெளிப்புறத்தில் அதாவது, தெற்குப் பகுதியில் கிழக்குமுகமாய் விஷ்ணுவும், அவருக்கு எதிரில் மேற்கு முகமாய் ஆஞ்சநேயரும் அமைக்கப்பட்டுள்ளது. மற்றபடி சிவதுர்க்கையும், தட்சிணாமூர்த்தியும் மூலவரின் வெளிப்புறத்தில் இட, வலமாய் நிறுவப்பட்டுள்ளார்கள்.

#ஸ்தலத்தின்_சிறப்பு:

மூலவராகிய வேதபுரீஸ்வரர் #விசித்திர_லிங்கமும், மூலவரின் பின்பகுதியில் அதாவது, வட−மேற்கில் நிறுவப்பட்டிருக்கும் 1000 வருடங்கள் தாண்டிய பழமைமிக்க #நாகலிங்க_விருட்சமும்தான் இத்தலத்தின் மிக சக்திவாய்ந்த மற்றும் பிரபஞ்ச சக்தியின் கதிர்வீ்ச்சை தன்பால் ஈர்க்கும் ஆதார சக்திமையங்களாக விளங்குகின்றன.

லிங்கமானது விண்ணிலிருந்து பூமிக்குள் வந்த விண்கல்லால் உருவாக்கப்பட்டது எனவும், அது சந்திரகாந்தக் கல்லின் தன்மையை ஒத்திருக்கிறது என்றும் மிக ரகசியமாக கோவில் நிர்வாகக்குழுவால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் வெளிரிய வண்ணத்திலிருக்கும் லிங்கமானது #மாசிமாததத்தில் மட்டும் சூரியனின் கதிர்கள் லிங்கத்தில் படுகிறது, அவ்வாறு சூரியனின் கதிர்களானது லிங்கத்தில் படும்பட்சத்தில் அது மிளிரிய பொன்னிறமாக பிரகாசிக்கிறது. அப்படியாக சூரியக்கதிர்கள் லிங்கத்தில் படும் நாட்களில் சூரியபகவானே லிங்கத்தைப் பூஜிப்பதாக எண்ணி அன்றைய காலை நேரத்தில் மட்டும் மூலவர் இருக்கும் அறைக்குள் யாரும் செல்வது கிடையாது. ஆனால் இதற்கு அறிவிவியல் ரீதியான காரணமும் இருக்கிறது. அது என்னவெனில் விண்கல்லால் ஆன லிங்கத்தில், சூரியனின் கதிர்கள் படும்போது அங்கு அதிகப்படியான கதிர்வீச்சு வெளிப்படுதேயாகும். இவையெல்லாம் தீ்மானிக்கப்பட்ட சக்தியின் வீரியத்தை நிலைநிறுத்திப் புதுப்பிப்பதாகவும் இருக்கலாம் என்பது என்னுடைய அனுமானம். எனவே இத்தலத்தில் மாசிமாதத்தில் சிறப்பு பூஜைகளும், மாசிமாதத்தில் வரும் மஹா சிவராத்திரியும் மிகச்சிறப்பான சாங்கியங்களாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

#பக்திமார்க்கமும்_ஞானமார்க்கமும்

நமக்கு வேளியே அதாவது, பிரபஞ்சத்தில்  இறைவனைத்தேடுவது #பக்திமார்க்மென்றும், நம்மில் இருக்கும் இறைவனை உணர்வது என்பது #ஞானமார்க்கமேன்றும் நாம் அனைவரும் அறிந்ததே. இவ்வாறாக கோவில்கள் அனைத்தும் பக்திமார்க்கத்தின் அடிப்படையிலே, பாமரரும் பயன்பெறும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது, தவிர ஞானமார்க்த்திற்கு கடுந்தவமும், தியானமுமாகிய மனஒருநிலைப்பாடு அவசியமாய் இருக்கிறது, இப்படியான ஞானமார்க்கம் அனைவரும் கிடைக்கப்பெறுவதென்பது இறையின் அருளும், அவரவர் கர்மாவும் தீர்மானிக்கின்றன.

#நான்_உணர்ந்த_காலபைரவா:

குருநாளாகிய வியாழக்கிழமைன்று, வளர்பிறை−#அஷ்டமி திதி மற்றும் #புனர்பூசம் நட்சத்திரத்தில், இத்தலத்தின் நாகலிங்க விருட்சத்தின்கீழ் அமர்ந்து, ஓர் அமைதியான தியானத்திலிருக்கும் போது காலபைரவத் தன்மை உணரப்பட்டது. முதலில் ஓடிய சூரியகலை சுழிமுனையாகி, பிறகு அதுவே ஊசி போன்ற ஒரு மெல்லிய சுவாசமாகி, பிறகு சில நொடிகள் அச்சுவாசமும் நின்று, சுவாசமில்லா மனம் ஒடுங்கிய நிலையாகிய #காலபைரவ தன்மைக்குள் கொண்டுசென்றது. இதற்கு வலு சேர்க்கும் வண்ணம், என்னுடைய ஜனன லக்கினத்தில் குரு திக்பலத்துடன் இருப்பதும் ஓர் உந்து சக்தியாக அமைந்தது எனலாம். அப்படியான சுவாசமில்லாக் காலபைரவத் தன்மையில் உடல் இலேசாகி, குளிர்ந்து, அது ஒரு விதமான கிளர்ச்சிநிலை எனவும் கொள்ளலாம். ஆக இங்கு முழுக்க முழுக்க காலபைரவத் தன்மை சூட்சுமமாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதை மிகத் தெளிவாக என்னால் உணரமுடிந்தது.

#சனி_மற்றும்_ராகு #பரிகாரம்:

பொதுவாக நாளும் (திதி) கோளும் (நவக்கிரகங்கள்) சாதாரண மனிதனின் அன்றாட செயல்பாடுகளுக்கு முக்கிய காரணமாகின்றன. [அவ்வாறான கிரக செயல்பாடுகளின் தன்மைகள் நமக்கும், நம் செயல்பாடுகளுக்கும் காரணமாக இருப்பதை அறிய Astro Babu ஐயா அவர்களின் "கிரக காரத்துவம்" கட்டுரைகளைப் படிக்கப் புரிந்து கொள்ளலாம்]. அதில் அதிகப்படியாக சனி கிரகத்தின் தாக்கத்தை ஒவ்வொரு மனிதனும் கட்டாயமாக அனுபவித்தே ஆகவேண்டும் என்றும், ராகுவின் தீவிரத்தை முற்றிலுமாக குறைக்க எந்த ஒரு சிறந்த பரிகாரமுறைகளும் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் இக்கிரக செயல்பாடுகளின் தாக்கத்தைக் ஓரளவிற்கு குறைக்க அல்லது சமநிலைப்படுத்த அக்கிரக சக்திகள் தீர்மாணிக்கப்பட்ட ஸ்தலங்களுக்குச் செல்வது, பரிகார முறைகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதை அனைவரும் அறிவோம்.

ஆனால் நவக்கிரகங்கள் அனைத்தும் பஞ்சபூதத் தன்மையான "நமசிவாயத்திற்கு" கட்டுப்பட்டவை என்பதை #கோளறு_திருப்பதிகத்தில் #திருஞானசம்பந்தர் மிகத்தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார். ஆக நமசிவாயத்தில் நடுநிலை நாயகராய் திகழ்வபர் #காலபைரவர், அதாவது:

#ந−ருத்ரர்
#ம−அர்த்தநாரீஸர்
#சி−காலபைரவர்
#வ−நடராஜர்
#ய−சதாசிவப்பெருமான்

எனவே, நடுநிலையான காலமில்லாத் தன்மையை நாம் ஒரு ஷணம் (ஒரு நொடியில் 1000 பங்கு) உணர்ந்தாலும் அங்கு நாளும், கோளும் வேலை செய்யாது, அவ்வாறு உணரப்படும் சில ஷணங்கள், நம் உடலின் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த கிரக தன்மைகளையும் மாற்றியமைக்கும் அல்லது சமநிலைப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

எனவே ராகுவின் தீவிரத்தைக் குறைக்கவும், சனியின் தசா, புக்தி, அந்தரம், ஏழரைச்சனி ஜன்மசனி மற்றும் பாதசனி, அர்த்தாஷ்டமசனி, கண்டசனி, அஷ்டமசனி மற்றும் ஜனன லக்கின விரையசனி என சனிபகவானின் தாக்கத்தால் ஏற்படும் அனைத்து விதமான தடைகளுக்கும், மனக்குழப்பங்களுக்கும், தொடர்ந்த பயமும், தீராத நோயையும் போக்க பரிகாரமாய் குருநாளில், குரு நட்சத்திரத்தில், அஷ்டமி திதியில் இத்தலத்திற்குச் சென்று நிர்ணயிக்கப்பட்ட காலபைரவத் தன்மையை நம்முள் கிரகித்துக்கொள்ள அவை அனைத்தும் சீர்படுத்தப்பட்டு நமக்கு நல்லதொரு தன்மையையும், மனநிலையும் கிடைக்கப்பெறும் என்பதை என்னால் உறுதியாகக்கூற இயலும். மேலும் #திருநல்லாறு, #திருநாகேஷ்வரம் மற்றும் #காளஹஸ்தி அல்லது மற்றபிற சனி மற்றும் ராகு ஸ்தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் இத்திருத்தலத்திற்குச் சென்று காலபைரவத் தன்மையை அடைந்து நலம்பெற நண்பர்கள் அனைவருக்கும் எம்பெருமானின் அருளாசியுடன் பரிந்துரைக்கின்றேன்.

#மேலும்_சில_பரிகாரங்கள்:

சனி மற்றும் ராகுவிற்கான காலபைரவத் தன்மை மட்டுமில்லாது ஏனைய கிரகங்களின் (உதாரணமாக: சுக்கிரன்−பெருமாள், சந்திரன்−சக்தி, செவ்வாய்−முருகன், கேது−விநாயகர்) சக்திகளைப்பெற (அ) சமனிலைப்படுத்த அவரவர்களின் கிரக ஆதிபத்தியத்திற்கு ஏற்றார்போல், சரியான நாள், நட்சத்திரதை தேர்வு செய்து இத்திருத்தலத்திற்குச் சென்று #வழிபட அல்லது #தியானம் செய்ய, அதற்குண்டான சக்தி கதிர்வீச்சை ஸ்தலவிருட்சம் பிரபஞ்சத்திலிருந்து ஈர்த்து நமக்கு அளிக்கும் என்பதும் என்னுடைய அனுமானமாகும். ஆக இத்தலத்தின் அதிமுக்கிய மற்றும் நடுநிலைச் சக்திமையமாக வீற்றிருப்பது நாகலிங்க விருட்சமும், அதற்கடுத்ததாய் சிவலிங்கமும்தான்.

#குறிப்பு: லிங்க வழிபாடோ அல்லது விருட்ச தியானமோ அல்லது இரண்டும் கலந்தோ குறைந்தது 2 முதல் 3 மணி நேரங்கள் இருப்பது மிக அவசியம். மேலும் இது அனைத்து கோவில்களுக்கும் பொருந்தும்.

#முடிவுரை:

இத்திருத்தின் கிழமேற்குப் பகுதியில் 100 மீட்டர் தொலைவில் வேம்புலி அம்மன் ஆலயம மற்றும் ஆலாட்சி அம்மன் ஆலயம், கிழக்குப் பகுதியில் 200  மீட்டர் தொலைவில் ஆஞ்சநேயர் கோவில் மற்றும் 100 மீட்டர் தொலைவில் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம், தெற்குப்பகுதியில் 100 மீட்டர் தொலைவில் திரௌபதி அம்மன் ஆலயம், தென்கிழக்குப் பகுதியில் 125 மீட்டர் தொலைவில் தேவி ஶ்ரீகடும்பாடி அம்மன் ஆலயம் மற்றும் 150 மீட்டர் தொலைவில் ஶ்ரீ பெரியபாளையத்து அம்மன் ஆலயங்களும் புடைசூழ இருக்கின்றன. அதுமட்டுமில்லாது கிழக்குப்பகுதியில் 50  மீட்டர் தொலைவில் 500 ஆண்டுகள் பழமையான, அருள்மிகு மஹான் #ஶ்ரீதாடிக்காரசுவாமி ஜீவ சமாதியும், 200 மீட்டர் தொலைவில் 150 ஆண்டுகள் பழமையான, மஹான் #ஶ்ரீசாங்குசித்த #சிவலிங்கநாயனார் ஜீவ சமாதியும் வீற்றிருக்கின்றன.

எனவே இப்பகுதியில் ஶ்ரீ வேதபுரீஸ்வரர் மற்றும் வேதநாயகி அம்மன் நடுநிலை நாயகர்களாய், மாபெரும் இருப்பாகவும்−சக்தியோட்டமாகவும் இருந்து மக்களுக்கு அருள்பாளித்து வருகின்றனர். இதை நண்பர்கள் அனைவரும் பயனுள்ளதாக்கிக் கொண்டு, ஏனைய நண்பர்களுக்கும் தர்மத்தின் வழியில் கொண்டுசெல்ல வேண்டுகிறேன். மேலும் மற்றபிற ஆலயங்களின் இருப்பு மற்றும் இயக்கசக்தியின் தன்மைகளையும் உணர்ந்து, திருவருளுடனும்−குருஅருளுடனும் அடுத்தடுத்த பதிவுகளாய் பரிகாரங்களுடன் பதியப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி...!!!

உண்மையைத்தேடி (#சந்திரன்)

அமெரிக்கர்கள் நிலவிற்குச் சென்றார்கள் என்பது முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டவை என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்...?

அப்புகைப்படங்கள் அனைத்துமே நாசாவால் சித்தரிக்கப்பட்டவை (graphics). அதுதான் கிராபிக்ஸ் உருவான காலமும். கிராபிகஸ் உருவான ஆண்டையும் (1960) ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்த ஆண்டையும் (1969) ஒப்பிட்டுப்பார்க்க உண்மை விளங்கும்.

அப்படியான நாசாவின் நாடகத்திற்கு காரணம் உலக நாடுகளுக்கு மத்தியில் தன்னை வலிமையான நாடு என்று முன்னிலைப்படுத்தவே சித்தரிக்கப்பட்டது.

உண்மையில் விடுபடு திசைவேகத்தை (Escape velocity, square root of 2GR-11.2 kms/sec) கணித்து இப்புவியிலிருந்து நிலவிற்கு சென்றாலும் மீண்டும் உயிருடன், சுயநினைவுடன் பூமிக்கும் திரும்ப முடியாது.

அப்படியே அமெரிக்கர்கள் சென்றிருந்தாலும் அதற்கடுத்தகட்ட முயற்சியாக பல முறை சென்றிருக்க வேண்டும், தவிர செவ்வாய் கிரகத்தை ஆராயும் அவசியம் கிடையாது.

உண்மை என்னவெனில் இப்போது இருக்கும் விஞ்ஞானமுறையைப் பயன்படுத்திக்கூட நாசாவால் நிலவை அடைந்து திரும்ப முடியாது.

Monday, 29 February 2016

ராகு-கேது

ராகு = விஞ்ஞானம்

கேது=மெய்ஞானம்

குண்டலினி சக்தியை மேல் ஏற்றினால் கேது. குண்டலினி சக்தியை கீழ் இறக்கினால் ராகு.

தற்போது வளர்ந்து வரும் கலை மற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அனைத்திற்கும் காரண கர்த்தா ராகுவே.

இந்த அசூரவேகமான விஞ்ஞான வளர்ச்சி அழிவை நோக்கியே நம்மை இழுத்துச் சென்று கொண்டுள்ளதை உணராமல் வெகு இன்பமயமாக வாழ்ந்து வருகின்றோம். ராகுவிற்கு போகக்காரகன் என்பதற்கு காரமும் இதுவே. எல்லா சுகபோகத்தையும் தந்து, உடலை சர்ப்பத்தை போல் விஷமாக அல்லவா ஆக்கி விடுகிறார்.

ஒரு கெட்டவனை பார்த்து நாம் பேச்சு
வழக்கில் கூறுவோமே, இவனுக்கு
உடம்பெல்லாம் விஷமடா என்று தானே.
அப்போ ராகு போகத்தையும் இன்பத்தையும் கொடுத்து உடலை கெடுத்தல்லவா விடுகிறார்.

உடல் என்பது சந்திரன்.
உடல் என்பது மனம்.

மனம் கெட்டால் உடல் தானாக
கெட்டுவிடும்.உடல் கெட்டால் உயிர்
போய்விடுமல்லவா...?

அதனால் தான் திருமூலர் கூட
பாடியிருக்கிறார்.

"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானமும் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே."

ஆக ராகுவால் அனுபவிக்கப்படும் அனைத்து சுகபோகங்களும் ஒரு மனிதனின் அழிவையே சந்திக்க வைக்கும். ராகுவே விஞ்ஞானம்.

விஞ்ஞான வளர்ச்சி மனிதனின் உடலைக் கெடுத்து உயிரை அழித்து விடும்.

அதனால் தான் ராகுவை கொடுத்துக்
கெடுப்பார் என நம் முன்னோர்கள் ஜோதிட பரிபாஷையில் மிக அற்புதமாக கூறிச் சென்றுள்ளார்கள்.

ஆனால் கேதுவோ பாம்பின் தலையையும் மனித உடலையும் பெற்று, உடலை பாதுகாத்து உயிரை வளர்க்கும் மெய்ஞானக்காரகன் கேதுவே.

அதனால் தான் உடம்பை அழிப்பவர்
மெய்ஞானம் சேரமாட்டார் என
தெள்ளத்தெளிவாக திருமூலர் கூறியுள்ளார்.

மேலும் திருமூலர் கேதுவிற்கு ஒரு
பாடலையும் மிக அற்புதமாக எழுதியுள்ளார்.

"உடம்பினை முன்னம் இழுக்கென்று
இருந்தேனே உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புள்ளே உத்தமன் கோவில் கொண்டான்
என்று உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே."

ஆக கேது உடம்பை பற்றிய உண்மையான ஞானத்தை அறிய வைத்து அதில் உத்தமனாகிய சிவன் அமர்ந்துள்ளான் என்பதை அறிய வைத்து, சவமாகிய இந்த உடம்பை
சிவமாக்கி, உயிரை அழியவிடாமல் தடுத்து அழியா முக்திப்பேற்றை தருவது கேதுவே.

பற்று அற்ற வாழ்க்கை வாழ்ந்தால் கேது
மெய்ஞானத்தை உணர வைத்து பிறவாவரம் என்னும் முக்தியை நிச்சயம் தருவார்.

பற்று உடைய வாழ்க்கை வாழ்பவர்களுக்கு ராகு பொய்யான ஞானத்தை கொடுத்து, மீண்டும் மீண்டும் இப்பூமியில் பிறப்பெடுக்க வைத்து மனிதனை இறைநிலையை அடைய விடாமல் தடுத்து விடுவார்.

ராகு உடம்பால் பெறும் அனைத்து
சுகத்தையும் கொடுத்து உயிரை கெடுத்து விடுவார்.

கேது உடம்பால் பெறும் அனைத்து
சுகத்தையும் கெடுத்து உயிரை கொடுத்து விடுவார்.

ராகு கொடுத்து கெடுப்பான்.
கேது கெடுத்து கொடுப்பான்.

ராகு விஞ்ஞானத்தின் வளர்ச்சி
கேதுவே மெய்ஞானத்தின் வளர்ச்சி.

நம் சித்தர்கள் கண்ட சாகா கலையே
உண்மையான மெய்ஞான வளர்ச்சி.

இன்றைய விஞ்ஞானம் ஒரு மனிதன் சாகாமல் இருக்க என்ன வழி என்று ஆராய்ந்து விட்டு,உடம்பில் உள்ள செல்கள் அனைத்தும் செயல் இழந்துவிட்டால் உயிர் போகத்தானே
வேண்டும் என்ற மிகப் பெரிய கண்டுபிடிப்பை பிடித்து விட்டது.

ஆனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே உயிர் போகமல் இருக்க செய்யும் வழிமுறையை அறிந்தவர்கள் நம்முடைய சித்தர்களே என்று நாம் பெருமையடையலாமே.

மனிதனின் உயிரை வளர்க்கும் கலை
மெய்ஞானக் கலை. விஞ்ஞானம் என்பது வீழ்ச்சி மெய்ஞ்ஞானம் என்பதே உண்மையான வளர்ச்சி.

அனைவரும் அந்த உண்மை ஞானத்தைப் பெற்று தீர்க்காயுளுடன் வாழ முதன்மை கடவுளாகிய வினாயக பெருமானை வழிபட்டு வாருங்கள்.

உங்கள் குண்டலினி சக்தி விழிப்படைந்து மேல் ஏற்றினால் பிறவா முக்தி நிச்சயம்.